Tiruchirappalli

News February 1, 2026

திருச்சி: டிகிரி போதும்-அரசு வேலை!

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News February 1, 2026

திருச்சி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருச்சி மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்க.

News February 1, 2026

திருச்சி: காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்

image

திருச்சி மத்திய மண்டல காவல்துறைக்கு உட்பட்ட மாவட்டங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு, சைபர் கிரைம், சிபிசிஐடி உள்ளிட்டவற்றில் ஆய்வாளராக பணிபுரிந்த 47 பேரை, பணியிடமாற்றம் செய்து மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் விதிமுறைகள் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக, ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 1, 2026

திருச்சி: வேன் கவிழ்ந்து விபத்து – 14 பேர் காயம்

image

திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் உமையாள்புரம் அருகே மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து நேற்று இரவு கவிழ்ந்தது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஆன்மீகப் பயணம் முடிந்து திரும்பியபோது இந்த விபத்து நேரிட்டது. இதில் வேனில் பயணித்த 14 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த 6 பேர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முசிறி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 1, 2026

திருச்சி: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

image

திருச்சி மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News February 1, 2026

திருச்சி: அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் 65 போஸ்ட் மாஸ்டர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க விரும்புவோர் https://indiapost.gov.in/gdsonlineengagement என்ற இணையதளம் வழியாக உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து வரும் பிப்.14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News February 1, 2026

திருச்சி: அரசு சுகாதார துறையில் வேலை!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது: 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News February 1, 2026

திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மாவட்டம் முழுவதும் தாயுமானவர் திட்டம் மூலம் மூத்த குடிமக்களுக்கான குடிமைப் பொருட்கள் கொடுப்பதற்கான திட்ட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.‌ அதன்படி வரும் பிப்.2, 3 ஆகிய தேதிகளில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் இல்லங்களுக்கு சென்று குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 31, 2026

திருச்சி: கண் குறைபாடுகளை நீக்கும் கோயில்

image

திருச்சி, துவாக்குடியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில், பொய்கைக்குடிக்கு அருகே மலையடிப்பட்டியில் கமலவல்லி நாச்சியார் சமேத கண்நிறைந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கண் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், பெருமாளுக்கு அமாவாசை அல்லது சனிக்கிழமை ஆகிய நாட்களில் கண்மலர் சாற்றி அர்ச்சனை செய்தால் கண் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 31, 2026

திருச்சி: B.E போதும் ரூ.48,480 சம்பளத்தில் வேலை

image

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Specialist Officer (IT) பணியிடங்களைநிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 418
3. வயது: 22 – 37
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.1,05,280
5. கல்வித் தகுதி: B.E/B.Tech, M.E/M.Tech, MCA
6. கடைசி தேதி: 19.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!