Tiruchirappalli

News January 31, 2026

திருச்சி: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

திருச்சி மாவட்ட மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <>www.msmeonline.tn.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

News January 31, 2026

சமயபுரம் மாரியம்மன் கோவில் நடையடைப்பு

image

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, கொள்ளிடம் வடதிருக்காவேரியில் மாரியம்மன் தீர்த்தவாரி கண்டருள செல்வதால், நாளை (பிப்.1) மாலை 3:30 மணிக்கு நடை சாத்தப்பட்டு, நாளை மறுதினம் (பிப்.2) காலை 5:30 மணிக்கு வழக்கம் போல நடை திறக்கப்பட்டு, மூலஸ்தான அம்பாள் சேவை நடைபெறும் என, கோவில் இணை ஆணையர் சூரியநாராயணன் தெரிவித்துள்ளார்.

News January 31, 2026

திருச்சி: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

image

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற <>’இங்கே கிளிக்’<<>> செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் (Indane/Bharat/HP) தேர்வு செய்யவும்
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

News January 31, 2026

திருச்சி: ராணுவத்தில் வேலை- APPLY NOW

image

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 31, 2026

திருச்சி: தைப்பூசம் சிறப்பு ரயில் அறிவிப்பு

image

தைப்பூசத்தை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து திருச்சி வழியாக தூத்துக்குடிக்கு சிறப்பு அதிவிரைவு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது நாளை (ஜன.31) இரவு 11:50 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, திருச்சி வழியாக நாளை மறுதினம் (பிப்.1) காலை 11 மணியளவில் தூத்துக்குடி சென்றடையும். பயணிகள் இந்த ரயிலை பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்த்து கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 31, 2026

திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் தனியார் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெல்ட் டைப் இயந்திரத்திற்கு 1 மணி நேரத்திற்கு ரூ.2600 எனவும், டயர் டைப் இயந்திரத்திற்கு 1 மணி நேரத்துக்கு ரூ.1800 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்டால், வட்டாட்சியர்கள், வேளாண் அலுவலர்களிடம் புகாரளிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 31, 2026

திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் தனியார் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெல்ட் டைப் இயந்திரத்திற்கு 1 மணி நேரத்திற்கு ரூ.2600 எனவும், டயர் டைப் இயந்திரத்திற்கு 1 மணி நேரத்துக்கு ரூ.1800 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்டால், வட்டாட்சியர்கள், வேளாண் அலுவலர்களிடம் புகாரளிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 31, 2026

திருச்சி: அன்பு சோலை மையம் குறித்த அறிவிப்பு

image

சமூக நலன் & மகளிர் உரிமை துறை சார்பில், திருச்சி பெட்டவாய்த்தலை மற்றும் கொட்டப்பட்டு பகுதியில் மூத்த குடிமக்களுக்கான அன்பு சோலை மையம் செயல்பட்டு வருகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் இந்த மையத்தில் உணவு, இயன்முறை மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களுக்கு 0431-2413796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 31, 2026

திருச்சி: காவல்துறை அதிரடி நடவடிக்கை

image

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில், பேருந்தை அதிவேகமாக ஓட்டிய பேருந்து ஓட்டுநரை தட்டிக் கேட்ட பயணியை, தனியார் பேருந்து ஓட்டுநர் தாக்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் அதிவேகமாக பகிரப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக திருச்சி காவல்துறை துரிதமுடன் செயல்பட்டு ஓட்டுனர் அன்புராஜை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

News January 31, 2026

திருச்சி: காவல்துறை அதிரடி நடவடிக்கை

image

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில், பேருந்தை அதிவேகமாக ஓட்டிய பேருந்து ஓட்டுநரை தட்டிக் கேட்ட பயணியை, தனியார் பேருந்து ஓட்டுநர் தாக்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் அதிவேகமாக பகிரப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக திருச்சி காவல்துறை துரிதமுடன் செயல்பட்டு ஓட்டுனர் அன்புராஜை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!