India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நாளை (ஆக.30) காலை 10 மணிக்கு திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் லூர்துசாமி மண்டபத்தில் நடைபெற உள்ளது. எனவே, இதில் மாமன்ற உறுப்பினர்கள், வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது பகுதி குறைகளை தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளார்.
திருச்சி ராம்ஜி நகரில் ஒரு பள்ளிக்கும், கல்லக்குடியில் உள்ள பள்ளிக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து கல்லக்குடியில் உள்ள பள்ளியில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
வாழவந்தான் கோட்டையை சேர்ந்த ரோஷன் (19). திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை காட்டூரில் பைக் சாகசம் செய்து, அதை சமூக வலைதளத்திலும் பதிவிட்டாா் . இதுதொடா்பாக திருவெறும்பூா் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, ரோஷனை நேற்று கைது செய்து அவரது பைக்கையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் முருகேசன் (51). அதே பகுதியை சேர்ந்த சமது நேற்றிரவு முருகேசனை சந்தித்து பேசினார். அப்போது, தான் வாங்கிய கடனுக்காக முருகேசனை ஜாமீன் கையெழுத்து போடும்படி சமது வற்புறுத்தினார். முருகேசன் கையெழுத்திட மறுக்கவே, சமது அவருடன் வந்த ஆறுமுகம், காமராஜ் ஆகிய 3 பேர் முருகேசனை கத்தியால் குத்தியுள்ளனர். இதில, காமராஜ், ஆறுமுகம் கைது செய்யப்பட்டனர். சமது தலைமறைவானார்.
திருச்சி ஆட்சியர் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக National Defence Academy And Naval Academy Examination 2024 ஆகிய தேர்வுகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வினை மொத்தம் 469 பேர் எழுத உள்ளனர். இதற்காக திருச்சியில் 2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
திருச்சி ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக National Defence Academy And Naval Academy Examination 2024 ஆகிய தேர்வுகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வினை மொத்தம் 469 பேர் எழுத உள்ளனர். இதற்காக திருச்சியில் 2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
திருச்சி கே.கே. நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில் இன்று பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி 30 மனுக்களை பெற்றுக்கொண்டு, அந்த மனுக்கள் மீது உரிய தீர்வு காண சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். மேலும் உரிய பதிலளிக்க அறிவுரை வழங்கியும், நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையிலான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். இதில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சியில் உள்ள பெண் வேலைநாடுநர்களை தனியார் நிறுவனத்தில் பணியமர்த்தும் நோக்கத்துடன், திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 29, 30ஆம் தேதிகளில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில், 12ஆம் வகுப்பு தேர்ச்சி, ஐ.டி.ஐ கல்வி தகுதியுடைய 18 முதல் 21 வயதுடைய பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருச்சி ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக National Defence Academy And Naval Academy Examination 2024 ஆகிய தேர்வுகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வினை மொத்தம் 469 பேர் எழுத உள்ளனர். இதற்காக திருச்சியில் 2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.