India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சியில் இருந்து 145 பயணிகளுடன் இன்று பிற்பகல் 1.12 மணிக்கு துபாய் நோக்கி புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஈரான் நாட்டில் நிலவும் போர் பதற்றம் காரணமாக திருப்பி அனுப்ப கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கியில் Assistant (உதவியாளர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 650
3. சம்பளம்: ரூ.58,514
4. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 20-28
6. கடைசி தேதி: 08.03.2026
7.விண்ணப்பிக்க:<
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பாலசுப்பிரமணியம், துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த நல்லதம்பி, திருச்சி மாவட்ட ஆட்சியரக செய்தி மக்கள் தொடர்பு துறை உதவி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் செந்தாமரை தலைமையில், வரும் மார்.3ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு புதிய மின் இணைப்பு, மின் இணைப்பில் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு குறைகளை தெரிவித்து பயனடையலாம் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது <

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள், வரும் மார்ச்.2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் வீடு தேடி வந்து வழங்கப்பட உள்ளது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது இல்லங்களிலேயே ரேசன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் கல்லாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு, கடந்த பிப்.25ஆம் தேதி தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 35 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கானக்கிய நல்லூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் வேலங்குறிச்சி காயங்காடு காட்டுப்பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.