Tiruchirappalli

News March 1, 2026

திருச்சி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 1, 2026

திருச்சி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

திருச்சி: டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை!

image

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.

News March 1, 2026

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு

image

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்.ஐ டி), டெக்னிக்கல் உதவியாளர், இளநிலை பொறியாளர், நூலகம் மற்றும் தகவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுடைய நபர்கள் www.nitt.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, வரும் மார்ச் 25-ம் தேதிக்குள், “The Register, NIT, Trichy – 620015” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 1, 2026

திருச்சி: +2 பொதுத்தேர்வு எழுதவுள்ள 31,215 பேர்

image

தமிழகம் முழுவதும் +2 பொதுத்தேர்வு நாளை (மார்ச் 2) தொடங்க உள்ளது. இத்தேர்வினை திருச்சி மாவட்டத்தில் 134 தேர்வு மையங்களில், 258 பள்ளிகளைச் சேர்ந்த 14,731 மாணவர்கள், 16,484 மாணவிகள் என மொத்தம் 31,215 பேர் எழுத உள்ளனர். மேலும் தனித்தேர்வர்களாக 510 ஆண்கள், 457 பெண்கள் என 967 பேர் எழுத உள்ளனர். தேர்வு நல்ல முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய 260 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News March 1, 2026

திருச்சி: மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமானங்கள் ரத்து

image

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக, திருச்சி விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படும் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கு ஏற்ப பயணிகள் தங்களது பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். போர் சூழல் குறித்து அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த ரத்து நடவடிக்கை தொடரும் என திருச்சி சர்வதேச விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 1, 2026

திருச்சி: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

திருச்சி: திமுகவின் மாநில மாநாடு பணி தீவிரம்

image

திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் திமுகவின் 12வது மாநில மாநாடு மார்.9ஆம் தேதி நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், மாநாட்டு திடலில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 1, 2026

திருச்சி: லஞ்சம் பெற்ற வழக்கில் மின் பொறியாளர் கைது

image

திருச்சி மாவட்டம் துறையூர் செங்காட்டுப்பட்டி மின் பொறியாளர் ராஜு விவசாய நிலத்திற்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.3000 லஞ்சம் கேட்க, அதைக் கொடுக்க விரும்பாத, கோம்பையைச் சேர்ந்த முத்து என்பவர் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச கண்காணிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசாரிடம் புகார் கொடுத்த நிலையில், நேற்று ராஜு கையூட்டு பெற்ற போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

News February 28, 2026

திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!