India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாகியும், தொடர்ந்து பதிவை புதுப்பித்து வரும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்கும் இளைஞர்கள் திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இதில், 3 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும். இதனை அனைவருக்கும் SHARE செய்யவும்.!

தெற்கு மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சி இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2801
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: 10th, ITI
5. கடைசி தேதி: 11.04.2026
6. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் இதயத்துடிப்பு கோளாறுகளுக்கான எலக்ட்ரோ பிசியாலஜி ஸ்டடி மற்றும் அதனுடன் தொடர்புடைய சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை பெண்கள் 8 பேருக்கும், ஆண்கள் 5 பேருக்கும் என மொத்தம் 13 நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் குமரவேல் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட ஹிலால் கமிட்டி கூட்டம், கமிட்டியின் தலைவரும், மாவட்ட அரசு ரம்ஜான் அறிவிப்பு தொடர்பாக, காஜியமான ஜலீல் சுல்தான் தலைமையில் நாளை (மார்ச் 19) நடைபெற உள்ளது. பெரிய கடை வீதி பேகம் பள்ளிவாசலில் நடைபெறும் இந்த கூட்டத்தில் திருச்சி மாநகர, மாவட்ட ஹிலால் கமிட்டி உறுப்பினர்கள், உலமாக்கள், முக்கிய சமுதாய பிரமுகர்கள் கலந்து கொள்ள வேண்டும் என அரசு டவுன் ஹாஜி ஜலில் சுல்தான் தெரிவித்துள்ளார்.

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <

தேர்தல் காலமான தற்போது, ஓட்டல்களில் மொத்த ஆர்டர்கள் மற்றும் மொத்தமாக டோக்கன்கள் ஏதேனும் வந்தால், அதுகுறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான வகையில் யாரேனும் தங்கும் விடுதிகளுக்கு வந்தால் அதுகுறித்தும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- ஶ்ரீரங்கம் – 9445461797,
கிழக்கு – 9600535464, மேற்கு – 9445000455, மணப்பாறை – 9445477835, திருவெறும்பூர் – 9445000277, லால்குடி – 9445000456, மண்ணச்சநல்லூர் – 9445074602, முசிறி – 9445000457, துறையூர்-9385251283. இத்தகவலை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இருந்து காரைக்குடிக்கு வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலை, தினசரி சேவையாக வழங்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில் திருச்சி – காரைக்குடி பயணிகள் ரயில் சேவை வரும் 21-ம் தேதி முதல் தினசரி ரயில் சேவையாக மாற்றப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் வரும் 22-ம் தேதி முதல் தினசரி சேவையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சியில் இருந்து காரைக்குடிக்கு வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலை, தினசரி சேவையாக வழங்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில் திருச்சி – காரைக்குடி பயணிகள் ரயில் சேவை வரும் 21-ம் தேதி முதல் தினசரி ரயில் சேவையாக மாற்றப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் வரும் 22-ம் தேதி முதல் தினசரி சேவையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சியில் இருந்து காரைக்குடிக்கு வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலை, தினசரி சேவையாக வழங்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில் திருச்சி – காரைக்குடி பயணிகள் ரயில் சேவை வரும் 21-ம் தேதி முதல் தினசரி ரயில் சேவையாக மாற்றப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் வரும் 22-ம் தேதி முதல் தினசரி சேவையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.