Tiruchirappalli

News November 5, 2024

துணை முதலமைச்சர் நாளை திருச்சி வருகை

image

மணச்சநல்லூர் தொகுதி உட்பட்ட இருங்கலூர் பகுதியில், நாளை மணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மகள் திருமணத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். அவரை வரவேற்க திருச்சி வடக்கு மாவட்டம் மற்றும் மத்திய மாவட்ட செயலாளர்கள் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.

News November 5, 2024

முதலமைச்சரும், தவெகெ விஜய்யும் ஒரே மேடையில்: திருமாவளவன்

image

அம்பேத்கர் குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் பங்கேற்பார் என ஏற்கனவே கூறப்பட்டது. தற்போது அந்நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து எங்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன் என திருச்சியில் இன்று திருமாவளவன் பேட்டி அளித்தார். ஷேர் செய்யவும்

News November 5, 2024

திருச்சி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில் திருச்சி மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டு ராபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி பொது சேவை மையம், சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கி மற்றும் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம் என கூறியுள்ளார்.

News November 5, 2024

திருச்சியில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

திருச்சியில் சமீப காலமாகவே தொடர்ந்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இருந்து வருகிறது. இந்த நிலையில் திருச்சி தனியார் கல்லுரி மற்றும் 4 பள்ளிகளுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் பள்ளிகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். SHAREIT

News November 5, 2024

திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருச்சி அருகே மனநலன் பாதிக்கப்பட்ட வடமாநில பெண்ணிடமிருந்து மீட்கப்பட்ட 2 குழந்தைகளின் பெற்றோர், உறவினர்கள் தொடர்பு கொள்ள இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 21 நாள்களுக்குள் உரியவர்கள் வராவிட்டால் குழந்தைகள் தத்தெடுப்பு சட்டத்தின் கீழ், குழந்தை தத்து வழங்குவதற்கான தடையில்லா சான்று வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News November 5, 2024

தந்தை திட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை

image

திருச்சி பிராட்டியூரை சேர்ந்தவர் ராமசாமி இவரது அருகிலுள்ள பள்ளியில் மகள் ப்ளஸ் டூ படித்து வந்தார். இந்நிலையில் மாணவியின் தந்தை அவரிடம் மது போதையில் தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி நேற்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 4, 2024

விளையாட்டு விருது பெற ஆட்சியர் அழைப்பு

image

ஆண்டுதோறும் தேசிய அளவில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண், 2 பெண் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது மற்றும் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது, பரிசு பெற திருச்சியை சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள் மாவட்ட இளைஞர் நலன் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 4, 2024

திருச்சி: மக்களிடமிருந்து குவிந்த 384 மனுக்கள்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, ஜாதி சான்றுகள், முதியோர் உதவித்தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட உதவிகள் என பொதுமக்களிடமிருந்து மொத்தம் 384 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

News November 4, 2024

இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு முகாம்

image

திருச்சியின் பல்வேறு கிராமங்களில் உள்ள ஆதி திராவிடர் சமூகத்தினருக்கு 2வது கட்டமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க, நில எடுப்பு செய்யப்பட்ட நிலங்களில் காலியாக உள்ள மனைகளில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஏதுவாக வரும் 5,6,7ஆம் தேதிகளில் அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற ஆட்சியர் இன்று தெரிவித்தார்.

News November 4, 2024

சுவிட்சர்லாந்து செலர்ஜின் பறிமுதல்

image

திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்த எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர். அதில் மூன்று பயணிகள் 47 வெள்ளி நிற பொட்டலங்களுடன் வந்தது தெரிய வந்தது. அது செலர்ஜின் சுவிட்சர்லாந்து உணவு பொருட்கள் என தெரியவந்தது. இதன் மதிப்பு 1.37 கோடி ரூபாய் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!