India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகர் விஜய் துவங்கியுள்ள கட்சியின் கொள்கை கோட்பாடுகள் அவருடைய கட்சியின் வளர்ச்சிக்காக இருக்க வேண்டும். மற்ற கட்சிகளை திருப்தி படுத்துவதற்காக கொள்கை கோட்பாடுகளை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கட்சியின் ஏ டீம், பி டீம் என்பதெல்லாம் தேவையில்லாத பேச்சு என தெரிவித்தார்.
திருச்செந்தூரில் கந்தசஷ்டி 6ம் நாளான இன்று சூரசம்ஹாரம்நடைபெற உள்ளது. இந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு திருச்சி வழியே தாம்பரம் – நெல்லை சிறப்பு ரயிலானது நேற்று இரவு 10.30க்கு புறப்பட்டது. பின்னர்
இன்று இரவு நவ,7ம் தேதி இரவு 10.15க்கு திருச்செந்தூரில் இருந்து திருச்செந்தூர்- எழும்பூர் சிறப்பு ரயில் புறப்படும் என்று திருச்சி தெற்கு ரயில்வே நிர்வாக மேலாளர் நேற்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மண்ணச்சநல்லூர் அருகே அழகிய மணவாளன் பகுதியை சேர்ந்த பெரியசாமி ஜீவா (45). கூலி வேலைக்கு செல்வதற்காக மணச்சநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே சாலையை கடக்க முயன்ற ஜீவா மீது துறையூரிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு வந்த தனியார் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் ஜீவா படுகாயமடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கே.கே.நகரில் கடந்த செப்டம்பர் மாதம் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து 1¼ பவுன் நகையை பறிப்பு மற்றும் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முகமது உசேன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு இன்று திருச்சி மகிளா நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீவட்சன் குற்றவாளிக்கு 10 வருட சிறை தண்டனையும், சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க கோரி தீர்ப்பளித்தார்.
திருச்சி பாபு ரோட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை விற்பனை செய்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த ரேவராம், கஜானா ராம் ஆகிய இருவரையும் கைது செய்து வாகனங்கள் மற்றும் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாநகர் வயலூர் சாலையைச் சேர்ந்த ரெட்டி நலச்சங்க தலைவர் செல்வராஜ் என்பவர் இன்று திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில், நடிகை கஸ்தூரி மீது மூன்று பிரிவுகளின் கீழ் மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய நிலையில் இவர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று மாலை திருச்சிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். எனவே இது தொடர்பாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அன்பில் மகேஷ் திருச்சிக்கு வரும் துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாகவும் இதில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிக்கை விடுத்துள்ளார்.
லால்குடி அருகே கோவண்டக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த போன்சியாஸ் வயது 42 லால்குடி வெள்ளனூர் பகுதியில் திருமணம் செய்து கொண்டு வசித்து வந்தார். போன்சியாஸ் வெள்ளலூர் பகுதியில் உள்ள முத்து குளம் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார். திடீரென்று வலிப்பு ஏற்பட்டது. அவர் தண்ணீர் மூழ்கி இறந்து விட்டார். லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வானது வரும் 9 ம் தேதி சனிக்கிழமை முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் இந்த தேர்வு 6 மையங்களில் 1840 தேர்வர்கள் முற்பகலில் எழுத உள்ளனர். மேலும், 2 இயங்கு குழுக்கள் மற்றும் தேர்வு மையத்தினை கண்காத்திட 6 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
துறையூரைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு பயிலும் 2 மாணவிகள் நேற்று அடையாளம் தெரியாத 3 பேர் காரில் மாணவிகளை கடத்தியதாக, சிறுகாம்பூர் அருகே காரை நிறுத்திய போது தப்பி வந்ததாக அப்பகுதியினரிடம் தெரிவித்தனர். பின் தகவலறிந்த முசிறி காவல்துறையினர் விசாரித்ததில் மாணவிகள் கடத்தப்படவில்லை. வீட்டில் படிக்க சொல்லி திட்டியதால் வீட்டை விட்டு வந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின் மாணவிகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.