India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவெறும்பூர் அருகே பனையக்குறிச்சியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சுந்தர்ராஜ். இவர் கடந்த 12ஆம் தேதி தலை துண்டித்து படு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான குற்றவாளிகளின் வீட்டை அடித்து நொறுக்கிய சுந்தர்ராஜின் சகோதரர் மற்றும் உறவினர்கள் உட்பட 7 பேர் மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதோடு சின்ராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.9.2024 அன்றைய தேதியில் 5 வருடம் முடிந்த, முறையாக பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்ற நபர்கள் ஊக்கத்தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
திருச்சி மேலப்புதூரில் செயல்படும் ஒரு தொடக்க பள்ளியின் விடுதியிலுள்ள மாணவிகளுக்கு மருத்துவர் சாம்சன் டேனியல் மருத்துவம் பாா்ப்பது போல பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த திருச்சி கோட்டை மகளிா் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் தொடா்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வருடம் தோறும் ஆயுத பூஜை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ஆயுத பூஜை விழாவிற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் ரயில்வே தொழிற்சாலையை பார்வையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள குடமுருட்டி சோதனை சாவடியில் இன்று காலை லாரி ஒன்று திடீரனெ புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கொப்பம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான மங்கப்பட்டி, முருங்கப்பட்டி, தளுகை, சோபனாபுரமஈச்சம்பட்டி, டாப் செங்காட்டுப்பட்டி, ஒசரப்பள்ளி ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. நேற்றிரவு கொப்பம்பட்டியில் அதிகபட்சமாக 50 மில்லி மீட்டர் மழையும், துறையூரில் 7 மில்லி மீட்டர் மழை, தென்புறநாட்டில் 30 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு நிருவாக துறை அமைச்சர் கேஎன் நேரு திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொறுப்பு வளர்ச்சி அமைச்சராக ஸ்டாலின் நியமித்துள்ளார். திருநெல்வேலியின் வளர்ச்சி பாதையை உருவாக்க நிர்வாகத்துறை அமைச்சரை நியமித்துள்ளனர். இதைப் போன்று அமைச்சர் செந்தில் பாலாஜியும் கோவை வளர்ச்சிக்காக நியமத்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் நில உரிமையாளர்கள் யாரேனும் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு செய்யும் நபர்களோ, சரித்திர பதிவேடு குற்றவாளிகளோ, நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாக மிரட்டினாலும் அவற்றை ஆடியோ, வீடியோ ஆதாரங்களுடன் 9787464651 என்ற எண்ணிற்கு புகார் அளிக்குமாறு திருச்சி எஸ் பி வருண்குமார் இன்று பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
திருச்சியில் கணவனை இழந்து கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 38,700 பெண்களுக்கு ரூ.6 கோடி செலவில் கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. திருச்சி 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 1400 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளி ஏழைப் பெண்ணாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆதார், குடும்ப அட்டை நகல், புகைப்படத்துடன் கால்நடை மருந்தகத்தை அணுக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பருவமழை காலத்தில் மழை, வெள்ளம் குறித்த தகவல்களை முன்கூட்டியே பொதுமக்கள் அறிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கும் வகையில், தமிழக அரசு “டிஎன் அலர்ட்” என்ற செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியினை பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இது செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி உள்ள நிலையிலும் எச்சரிக்கை எழுப்பும் என்று திருச்சி ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.