Tiruchirappalli

News November 9, 2024

அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர்

image

திமுக கழக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே என் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைச்சர் கே என் நேருவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார் உடன் திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

News November 9, 2024

ரயத்துமனை பட்டா பெற ஆட்சியர் தகவல்

image

மனச்சநல்லூர் வட்டம், மேல சீதேவி மங்கலம் கிராமத்தில் நத்தம் நிலவாரி திட்டத்தின் கீழ் ரயத்துமனை பட்டா பெறுவதற்கு புல எண் 104-ல் வசித்து வரும் நில உரிமை தாரர்களோ (அ) அவரால் நியமிக்கப்படும் நியமனதாரர்களோ நில அளவை அதிகாரிகள் நில அளவை செய்யும் போது உடனிருந்து அவரவர் இடங்களை காண்பித்தும், புல பரிசீலனை மேற்கொண்டும் பட்டாக்களை பெற்று பயனடைய மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News November 9, 2024

பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு

image

திருச்சியில் இருந்து மணப்பாறை மாரியம்மன் கோவில் பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த பேருந்தில் மோதியதில் வேங்கைகுறிச்சியை சேர்ந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 8, 2024

துப்பாக்கி சுடும் பயிற்சி: கலெக்டர் உத்தரவு

image

திருச்சி மாவட்டம், வீரமலை பாளையத்தில் உள்ள துப்பாக்கி சூடும் இடத்தில் வரும் 13ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும், ஆர்.டி.சி, சி.ஆர்.பி.எஃப் பயிற்சியாளர்களால் துப்பாக்கி சூடு பயிற்சி நடைபெற உள்ளது. எனவே சமயம் அப்பகுதியில் கால்நடைகள் மற்றும் மனிதர்கள் நடமாட்டம் இருக்க கூடாது என ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார்.

News November 8, 2024

சிறார்களுக்கு பாலியல் தொல்லை வேன் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு.

image

திருச்சி குண்டூர் பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்கள்  ஆம்னி வேன் ஒன்றில் பள்ளி மற்றும் தனிவகுப்பு  சென்று வருவது வழக்கம். அந்த வேனை ராஜேஷ்கண்ணா என்பவர் ஓட்டி வந்துள்ளார்.  ஒரு சிறுவனை மாலை தனிப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது, நூறடி சாலையில் வைத்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெற்றோர் திருவெறும்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

News November 8, 2024

24 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

image

முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக,மண்ணச்சநல்லூர் வட்டம், சிறுகாம்பூர் அரசு மேல்நிலை பள்ளியில் புதியதாக கட்டப்பட்டுள்ள 24 கூடுதல் வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார். சிறுகாம்பூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

News November 8, 2024

துணை முதல்வருக்கு புத்தகம் வழங்கிய ஆணையர்

image

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சென்னை செல்ல திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வருகை தந்தார். அவருக்கு திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் புத்தகம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News November 8, 2024

திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை

image

திருச்சி மாவட்டத்தில் அம்பிகாபுரம், அபிஷேகபுரம், சமயபுரம், புத்தாநத்தம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் நாளை (நவ.9) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, வள்ளுவர் நகர், மிலிட்டரி களிமண், உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 8, 2024

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு சிறை தண்டனை

image

வையம்பட்டி அடுத்த ஆவாரம்பட்டியைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் மீது கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு பின்பு உயிரிழந்தார். இந்நிலையில் கொலைவெறி தாக்குதல் நடத்திய அதே ஊரைச் சேர்ந்த ஆரோக்கியசாமி, அவரது மகன் ரவி ரோமாஸ் சார்லஸ்-க்கு 7 ஆண்டுகளும், மனைவி ரெஜினா மேரிக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ.12,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

News November 7, 2024

திருச்சி காவலர் மீது இளம்பெண் பாலியல் புகார்

image

காதலிப்பதாக கூறி புதுக்கோட்டையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கர்ப்பமாக்கி, கைவிட்ட திருச்சி தமிழ்நாடு சிறப்பு காவல் பட்டாலியனை சேர்ந்த காவலர் பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தன்னை ஏமாற்றி தனது குடும்பத்தினரை மிரட்டி தாக்கிய ஆயுதப்படை காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!