Tiruchirappalli

News October 6, 2024

ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயாருக்கு சிறப்பு அலங்காரம்

image

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உள்ள ரெங்கநாயகி தாயார் சன்னதியில் நடைபெற்று வரும் நவராத்திரி உற்சவத்தின் 2ஆம் நாளான நேற்று ரெங்கநாயகி தாயார் மூலஸ்தானத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி, கொலு மண்டபத்தில் சிம்மாசனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாயாரை மனதார வழிபட்டனர். ஷேர் செய்யவும்

News October 5, 2024

காவல்துறை சார்பில் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

image

திருச்சி மாநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மாலை குற்றச்சம்பவங்கள் மற்றும் உடல் ரீதியான சீண்டல்கள் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து அந்தப் பகுதிகளுக்கு உட்பட்ட திருமண மண்டபங்கள், பொது இடங்களில் பொதுமக்களை சந்தித்து காவல்துறை சார்பில் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் காவல் ஆணையர் காமினி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News October 5, 2024

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

image

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரை ஆபாசமாக பேசி எக்ஸ் தளத்தில் பதிவுகள் பதிவிட்ட மதுரையை சேர்ந்த திருப்பதி என்பவர் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நிபந்தனை ஜாமினில் வெளி வந்தார். இந்த நிலையில் சிறை சென்ற திருப்பதியை ஜாமினில் எடுக்கவில்லை என கூறி, தான் பணி புரியும் ஏஜென்சி உரிமையாளர் தர்ஷினியை ஆபாசமாக பேசியதாக மீண்டும் அவர் இன்று கைது செய்யப்பட்டார்.

News October 5, 2024

வாலிபரை மது பாட்டிலால் குத்தியவர் கைது

image

இனாம் சமயபுரத்தை சேர்ந்த மகாமுனியும், அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் லோகநாதன் மது பாட்டிலால் மகாமுனியை குத்தியதாக தெரிகிறது. இதில் மகாமுனிக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் லோகநாதனை கைது செய்தனர்

News October 5, 2024

கடன் பெற ஆட்சியர் அழைப்பு

image

தமிழ்நாடு அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் உற்பத்தி நிறுவனங்களுக்கு மிக குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்பட உள்ளது. இதில் திருச்சியை சேர்ந்த ஆர்வம் உள்ள தொழில் முனைவோர்கள், சிறு, குறு உற்பத்தி நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 8925534026 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News October 5, 2024

தரைக்கடைகள் அமைக்க ஆட்சியர் அழைப்பு

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி டவுன்ஹால் மைதானத்தில் தரைக்கடைகள் அமைக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார். மேலும் இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 18ஆம் தேதிக்குள் கட்டணத் தொகையை வருவாய் கோட்டாட்சியர் திருச்சிராப்பள்ளி என்ற பெயரில் வங்கி காசோலையாக வழங்க வேண்டும். மேலும் குழுக்கள் 21ஆம் தேதி நடைபெறும் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 4, 2024

திருச்சி ஆட்சியரின் அறிவிப்பு

image

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்கும் பணியின் தொடர்ச்சியாக, திருச்சியில் வாக்காளர்களின் பெயர்கள் இரட்டை பதிவாக வாய்ப்புள்ள 1,87,748 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு, இனம் காணப்பட்ட வாக்காளர்களுக்கு மட்டும் அறிவிப்புகள் அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக பொது மக்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் 0431-2419929 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News October 4, 2024

மனைவியை வெட்டிய கணவர் கைது

image

லால்குடி அருகே ஆதிக்குடி கிராமத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மனைவி மீது சந்தேகம் அடைந்த கணவன் ராஜேஷ் கடந்த 1ஆம் தேதி இரவு மனைவியை அருவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றார். லால்குடி போலீசார் கொலை செய்த ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். அப்போது மனைவியை கொலை செய்துவிட்டு தலை மறைவாக இருந்த ராஜேஷை லால்குடி போலீசார் கைது செய்தனர்.

News October 4, 2024

திருச்சியில் இலவச பயிற்சி வகுப்பு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் சார்பதிவாளர், உதவியாளர், துணை வணிகவரி உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 14.10.2024ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி முதல் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. எனவே இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற ஆட்சியர் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

News October 4, 2024

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

திருச்சி சர்வதேச விமான நிலைய மேலாளருக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்க செய்யும் பிரிவு போலீசார் விமான நிலையத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சியில் கடந்த சில தினங்களாக கல்வி நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!