India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ள நிலையில், விவசாயிகள் அறுவடைக்கு தயாராக உள்ள தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்த தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு பயிர்களை பாதுகாக்க வேண்டும். அதிக அளவில் பயிரிடப்படும் வாழைப்பயிர்களில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 383 மனுக்கள் வருகை தந்தது. இதில், இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ், இதர சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, நலத்திட்ட உதவிகள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பெறப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் அக்.15 மற்றும் 16-ஆம் தேதி (செவ்வாய், புதன்கிழமை) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 40-55 கி.மீ வரை பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் வேலைதேடும் இளைஞர்கள் மற்றும் பெண்களை பல்வேறு தனியார் துறைகளில் பணியமரத்த செய்யும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 18ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்களை கலந்து கொண்டு பயன்பெற ஆட்சியர் இன்று அழைப்பு விடுத்துள்ளார். ஷேர் செய்யவும்
தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங்கை மயிலாடுதுறை எம்பி ஆா்.சுதா கடந்த 1ஆம் தேதி நேரில் சந்தித்து மனு அளித்தாா். அதில் திருச்சி-மயிலாடுதுறை வழித்தடத்தில் பகல் நேரத்தில் கூடுதலாக ரயில் சேவை வேண்டி கோரிக்கை இருந்தது. இதனையடுத்து கடந்த திருச்சி – மயிலாடுதுறை வழித்தடத்தில் இண்டர் சிட்டி சேவை துவங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆா்.சுதாவுக்கு ரயில் பயணிகள் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.
துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த எஸ்ஐ லதா காவல் நிலையத்தில் உள்ள பெண்களுக்கான கழிப்பறையை பூட்டி அதன் சாவியை தானே வைத்துக் கொண்டு அவர் மட்டும் பயன்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்து எஸ்பி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த மனிதத் தன்மையற்ற செயலால் பெண் எஸ்ஐ, பெண்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். COMMENTIT
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு வழிகாட்டல் நிகழ்வு நடைபெறுகிறது. இதில் தேர்வு எழுதுவோருக்கான பாடத்திட்டம், புத்தகங்கள், தயார் செய்யும் உத்திகள் குறித்து விளக்கப்படவுள்ளது. மேலும் தேர்வுகளுக்கு தயார் செய்பவர்கள் தங்களது சந்தேகங்கள் குறித்து நேரடியாக விளக்கம் பெற்றுக்கொள்ளலாம். இவை அனைத்தும் இலவசம் என மாவட்ட மைய நூலகர் தனலட்சுமி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
ஆப்ரேஷன் அகழியில் சிக்கிய திருச்சி, அரியமங்கலத்தை சேர்ந்த மோகன் பட்டேல் என்ற நிலவணிகர் வீட்டில் எஸ்பியின் தனிப்படையினர் எஸ்.ஐ.ரெஜி தலைமையில் 20க்கும் மேற்பட்ட பெண் போலீசாருடன் சோதனை இட முயற்சி செய்த நிலையில், பட்டேல் எஸ்கேப் ஆனதாலும், மோகன் பட்டேல் குடும்பத்தினர் வீட்டை பூட்டிக்கொண்டு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும் திருச்சி அரியமங்கலத்தில் பரபரபரப்பு நிலவுகிறது.
திருச்சியில் உள்ள 4 நட்சத்திர ஹோட்டல்களுக்கு இன்று மர்ம நபர்கள் ஈமெயில் மூலம் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளனர். தொடர்ந்து இந்த மாதத்தில் மட்டும் 4ஆவது முறையாக ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கண்டோன்மென்ட் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி தில்லைநகர் அண்டகுண்டானை சேர்ந்த இசார் அலியின் மொபைல் போனை சதாம் உசேன் என்பவர் திருடி தலைமறைவாகி உள்ளார். அதனை தொடர்ந்து இசார் அலி, சதாம் உசேனை தேடி வந்த நிலையில், நேற்று சதாம் உசேனை சந்தித்த இசார் அலி மொபைல் போனை கேட்ட போது ஏற்பட்ட தகராறில் இசார் அலி சதாம் உசேனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.