India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தின் வயிலாக பராமரிக்கபட்டு வரும் வேதாரண்யம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் பிரதான நீர்உந்து குழாய் பழுதாகி குடிநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. அதனால் வரும் மார்ச்.26, 27 ஆகிய தேதிகளில் குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் தெரிவித்துள்ளார். உங்கள் பகுதி மக்களுக்கு SHARE பண்ணுங்க..
வடுவூர் காவல் சரகம் தனிப்பிரிவு காவலர்களுக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து வடுவூர் காவல்துறையினர் அத்திக்கோட்டை பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் வீட்டை சோதனை செய்தனர். அப்போது அங்கு ரூ.1,10 ,000 மதிப்பிலான குட்கா பொருட்கள் மொத்த விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. உடனடியாக காவல்துறையினர் முத்துசாமியை கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள 430 கிராம ஊராட்சிகளில் 2024-25ஆம் ஆண்டு சொத்து வரி, குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்கள் வரி, குடிநீர் கட்டணங்களை மார்ச்.31க்குள் vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..
திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) செளந்தரராசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று (மார்ச்.22) சனிக்கிழமை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாளாகும். தமிழ்நாடு அரசு புதிய நாட்காட்டியின்படி முழு ஆண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் விதமாக சனிக்கிழமை முழு வேலைநாள் என்று தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் SHARE பண்ணுங்க..
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே தகரவெளி பகுதியில் அமைந்துள்ள புற்றடி மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு காணிக்கையாக வழங்கப்பட்ட உயிர்சேவல்களை ஏலம் விடும் நிகழ்ச்சி கோவில் நிர்வாகம் சார்பில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் ரூ.13.77 லட்சத்திற்கு காணிக்கையாக வழங்கப்பட்ட சேவல்கள் ஏலம் போனதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழக அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் மார்ச்.23 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் திருவாரூர் புதிய பேருந்து நிலைய நுழைவாயில் அருகே ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாதா ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ( பொ) செளந்தரராசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை (மார்ச்.22) சனிக்கிழமை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாளாகும். தமிழ்நாடு அரசு புதிய நாட்காட்டியின்படி முழு ஆண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் விதமாக சனிக்கிழமை முழு வேலைநாள் என்று தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் SHARE பண்ணுங்க..
நவக்கிரகஸ்தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகாரகோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கலங்காமற் காத்தவிநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன்,மூலவர் குருபகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். SHARE NOW…..
திருவாரூர் அருகே புதுபத்தூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த நடராஜன் (57) என்பவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வழக்கின் விசாரணை திருவாரூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் நடராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6,000/- அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.