Thiruvarur

News March 25, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருவாரூரில் மாதம்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 27ஆம் தேதி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். இதில், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொள்ள ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். SHARE பண்ணுங்க..

News March 25, 2025

திருவாரூர் திருத்துறைப்பூண்டி மின்சார ரயில் சோதனை ஓட்டம்

image

வரும் 26/03/2025 (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு புதிதாக மின்மயமாக்கப்பட்ட திருவாரூர் சந்திப்பு – திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ளி பாதையில் அதிவேக மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. முதன்மை வணிக மின் பொறியாளர் அவர்கள் தலைமையில் திருச்சி கோட்ட மேலாளர் அவர்களும் இணைந்து ஆய்வு செய்ய உள்ளார்கள் என திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 25, 2025

திருவாரூர் மாவட்டம் தேமுதிக மாநில நிர்வாகி அறிவிப்பு

image

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நீடாமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த இரா ஜெயபால் அவர்கள் தேமுதிக தலைமை செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்த நிலையில் மார்ச் 24 இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இரா.ஜெயபால்-ஐ மாநில தொழிற்சங்க துணைத் தலைவராக நியமனம் செய்துள்ளார்.

News March 25, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு மையம் சம்பந்தமான கூட்டம்

image

இன்று மூன்று மணி அளவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில், அனைத்துக் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் தூரத்தில் உள்ள வாக்கு சாவடிகள் மாற்ற வேண்டும் பழுது அடைந்த வாகுசாவடி மையம் சரிசெய்ய வேண்டும் போன்ற கருத்துகளை அரசியல் கட்சி பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.

News March 24, 2025

இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மார்ச் 24, திங்கள்கிழமை) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களைத் தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும்.

News March 24, 2025

திருவாரூர் ஆழித்தேர் கட்டுமானப் பணிகள் மும்முரம்

image

புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேரான ஆழித்தேரோட்டம் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தேரின் கட்டுமான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

News March 24, 2025

திருவாரூரில் 40 ஊராட்சிகளுக்கு  காசநோய் இல்லா விருது

image

திருவாரூர் அரசு மருத்துவமணை மருத்துவ கல்லூரியில் இன்று உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் காசநோய் இல்லா 40 ஊராட்சிகளுக்கு ஆட்சியர் மோகனசந்திரன் கேடயம் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார். இதில் மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். நம்ம திருவாரூர் பெருமையை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News March 24, 2025

திருவாரூரில் இன்று விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பயனாளிகள் விரல் ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று (மார்ச்.24) அந்தந்த நியாய விலை கடைகளில் விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் அறிவித்திருந்தார். எனவே அனைவரும் கட்டாயம் ரேகை பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளார். ரேஷன் அட்டைதாரர்களுக்கு SHARE பண்ணுங்க.. 

News March 24, 2025

திருவாரூரில் மூடப்படாமல் இருக்கும் ஜீவ சமாதி

image

திருவாரூர் அருகே மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றங்கரையில் அமர்ந்து 1835ஆம் ஆண்டு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசாமதி அடைந்தார். சிறப்பு என்னவென்றால் இவரின் சமாதி மண்ணுக்கு அடியில் மூடப்படாமல் உள்ளது. மடாதிபதி மட்டும் உள்ளே இறங்கி பூஜை செய்வார். இங்கு ஆவணி உத்திரத்தன்று குருபூஜை சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் உங்களுக்குத் தெரிந்த சிறப்பு வாய்ந்த இடங்களை கமெண்ட பண்ணுங்க..தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 24, 2025

மன்னார்குடி: 30 நாட்களுக்கு நடைபெறும் திருவிழா

image

வைணவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி கோயில் பங்குனி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. வேறெந்த ஊரிலும் இல்லாத வகையில் மன்னார்குடியில் மட்டுமே 18 நாட்கள் திருவிழா, 12 நாட்கள் விடாயாற்றி திருவிழா என மொத்தம் 30 நாட்கள் ஊரே கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மேலும் உங்க ஊர் சிறப்பு குறித்து கமெண்ட் பண்ணுங்க.. இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..

error: Content is protected !!