Thiruvarur

News January 7, 2026

திருவாரூர்: தீரா நோய்களை தீர்க்கும் கோயில்

image

வலங்கைமான் வட்டம், நரிக்குடியில் எமனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் எமதர்ம ராஜாவுக்கென அமைந்துள்ள சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயிலில் அமைந்துள்ள ஊற்றில் சுரக்கும் நீரைப் பருகினால் தீராத நோய்களும் உடனடியாக குணமாகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் பிதுர்தோஷம் நீங்க, துர்மரணம் ஏற்படாமல் இருக்கவும் பக்தர்கள் இத்தலத்தில் உள்ள எமனை தரிசிக்கின்றனர். SHARE NOW

News January 7, 2026

திருவாரூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

திருவாரூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

News January 7, 2026

திருவாரூர்: மிக கனமழை எச்சரிக்கை!

image

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் ஜன.10-ம் தேதி (சனிக்கிழமை) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க!

News January 7, 2026

திருவாரூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

திருவாரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் அல்லது <>இங்கே கிளிக் செய்து <<>>உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 7, 2026

திருவாரூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

திருவாரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் அல்லது <>இங்கே கிளிக் செய்து <<>>உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 7, 2026

திருவாரூர்: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

திருவாரூர் மக்களே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரூ.3000 பணத்தை, வரும் ஜன.13-ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதனை பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ அல்லது டோக்கன்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல் இருந்தால், உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 7, 2026

திருவாரூர்: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

திருவாரூர் மக்களே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரூ.3000 பணத்தை, வரும் ஜன.13-ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதனை பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ அல்லது டோக்கன்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல் இருந்தால், உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 7, 2026

திருவாரூர்: முன்னாள் காங். தலைவர் பரபரப்பு பேட்டி

image

திருவாரூரில் நேற்று காங். கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், எல்லா அரசியல் கட்சியும் வளர வேண்டும், அதிகாரத்தில் பங்கு வகிக்க வேண்டும் என விரும்புவது இயல்புதான். எனவே அதிகாரத்தில் பங்கு வேண்டும் என நாங்கள் கேட்பதில் தவறில்லை. திமுக சிறப்பான முறையில் ஆட்சி நடத்துகிறது. அதேநேரம், ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸூக்கு பங்கு வேண்டும்’ என்றார் அவர்.

News January 7, 2026

திருவாரூர்: அப்பா கடையில் திருடிய மகன் கைது

image

மன்னார்குடி வினோபாஜி தெருவை சேர்ந்தவர் சையது அலி. இவர் அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடையில் கடந்த 4-ந்தேதி இரவு புகுந்த மர்ம நபர்கள் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.60,000 பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து மன்னார்குடி போலீசார் நடத்திய விசாரணையில், சையது அலியின் மகன் முகமது பைசல் (24) பணத்தை திருடியது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

News January 7, 2026

திருவாரூர்: கடலில் தவறி விழுந்து சாவு!

image

முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை சின்னங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (51). மீனவரான இவர், நேற்று முன்தினம் அதிகாலை சக மீனவர்களுடன் உப்புக்காடு அருகே வலை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்த போது திடீரென படகில் இருந்து தவறி கடலில் விழுந்துள்ளார். இதையடுத்து நீண்ட நேரத்திற்கு பிறகு குமார் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!