India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (டிச.31) இரவு 10 மணி முதல், நாளை(ஜன.1) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட உதய மார்த்தாண்டபுரம் அரசுப் பள்ளியில், தெற்கு பள்ளி மேட்டு பகுதியைச் சேர்ந்த 42 பயனாளிகளுக்கு வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், இலவச குடிமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு பட்டாக்களை வழங்கினர்.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட காவல்துறையின் சார்பில், முன்னெச்சரிக்கை அறிவுரைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மது அருந்திவிட்டு வாகனங்களில் வேகமாக செல்லக்கூடாது, பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில், வாகன சாகசங்கள் ஒலி எழுப்பும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்துவதை தவிர்க்கவும் உள்ளிட்ட அறிவுரைகளை, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கருண் கரட் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.