Thiruvallur

News June 3, 2024

திருவள்ளூர் விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

திருத்தணி, திருவள்ளூர், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கரும்பு பயிரிட்டு பதிவு செய்யாத விவசாயிகளை தொடர்புகொண்டு கரும்பு ஆலையின் அலுவலர் பதிவு செய்துவருகிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் கரும்பு சாகுபடிக்கு இதுவரை பதிவுசெய்யாத விவசாயிகள் பதிவு செய்யலாம் என நேற்று திருவள்ளூர் ஆட்சியர் பிரபுசங்கர் அறிவித்துள்ளார். விவரங்கள் பெற 9943966322 என்ற எண்ணை தொடர்புகொள்க.

News June 3, 2024

திருவள்ளூர்: குளிர்சாதன வசதி ஏற்படுத்த கோரிக்கை

image

திருத்தணி மலைமீது முருகன் கோயில் உள்ளது. விநாயகர், சண்முகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய உற்சவ முருகர், மூலவர் முருகர் தனி தனி சன்னதிகள் உள்ளன. இதில் மூலவர் முருகன் சன்னதியில் மட்டும் குளிர்சாதன வசதி உள்ளது. மற்ற சன்னதிகளில் பக்தர்கள் அதிகமாக வரும்போது கோடை வெயிலில் பக்தர்களுக்கு புழுக்கம் ஏற்பட்டு அவதிக்குள்ளாகின்றனர். மற்ற சன்னதிகளுக்கும் குளிர்சாதனம் வசதி ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

News June 2, 2024

திருத்தணி நாகாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

image

திருத்தணி காந்தி ரோடு பகுதியில் நாகாலம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் சுற்றுச்சுவர் மற்றும் கோவில் பராமரிப்பு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இக்கோயிலில் நேற்று கணபதி ஹோமத்துடன் நவ கலச பூஜை நடைபெற்றது. பின்னர் இன்று காலை நாகாலம்மன் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவமி தரிசனம் செய்தனர். 

News June 2, 2024

புழல்: நாய் கடித்து சிறுவன் படுகாயம்

image

புழல், டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்வா. இவரது மகன் ஜெரால்டு (12). நேற்று ஜெரால்டு வீட்டுக்கு வெளியே வந்தபோது பக்கத்து வீட்டிலிருந்து நாய் ஒன்று அவரை துரத்தி கடித்தது. இதில் ஜெரால்டு-விற்கு முகம், காது, மூக்கு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. அவனை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்து சிகிச்சை அளித்தனர். புகாரின் பேரில் புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 1, 2024

திமுக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

image

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி ஜூன் 4 அன்று நடைபெற உள்ள நிலையில், இப்பணியில் ஈடுபடும் திமுக முகவர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் கவரப்பேட்டையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் திமுக மக்களவை உறுப்பினர் டி.கே. இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி இணைய வழி ஆலோசனைகள் வழங்கினர்.

News June 1, 2024

58,127 பேர் விண்ணப்பம்: ஆட்சியர் தகவல்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் நேற்று கூறியதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் -4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு 58,127 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்காக 194 மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்வை துணை ஆட்சியர் அளவிலான குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.

News June 1, 2024

திருவள்ளூர்: 100% மாணவர்கள் சேர்க்கை

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான திறன் குழுக் கூட்டம் ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது அவர் கூறியது, மாவட்டத்தில் அரசு பயிற்சி மையங்கள் அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தொழிற்பயிற்சி மையங்களில் 100% மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு அரசு பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி வருகிறது என்றார்.

News June 1, 2024

திருவள்ளூர்: போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி

image

அம்பத்தூர் அருகே புத்தகரம் பகுதியில் அருணா (63) என்பவருக்கு ரூ.75 லட்சம் மதிப்பிலான 1800 சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலத்தை புத்தகரம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த இனியன் (34) என்பவர் போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்துள்ளார். புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இனியன் என்பவரை நேற்று கைது செய்தனர்.

News May 31, 2024

திருவள்ளூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை!

image

திருவள்ளூர் அருகே மணவாள நகர், எம்ஜிஆர் நகர் சேர்ந்தவர்கள் சதீஷ்(28), முரளி(23). இந்த நிலையில் நேற்று(மே 30) இரவு இவர்கள் இருவரையும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி உள்ளனர். இதில் சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முரளி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். புகாரின் பேரில் மணவாள நகர் போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

News May 30, 2024

பிரபல நடிகருக்கு திருத்தணி முருகன் கோவில் திருமணம்

image

ஜூன் 9ஆம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இதனை சமூக வலைதளத்தில் தனது திருமண அழைப்பிதழை நடிகர் பிரேம்ஜி வெளியிட்டுள்ளார். இந்த திருத்தணி முருகன் கோவிலில் நடைபெற உள்ள திருமணத்திற்கு திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த திருமண அழைப்பிதழ் சமூக வலைதளத்தில் மிகவும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

error: Content is protected !!