Thiruvallur

News April 1, 2024

திருவள்ளூர்: தேர்தல் பணிமனை திறப்பு

image

கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம் மப்பேடு கூட்டுச்சாலையில் திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்காக தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பணிமனையை நேற்று இரவு திறந்து வைத்தார் எம்எல்ஏ ராஜேந்திரன். உடன் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் உட்பட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

News March 31, 2024

திருவள்ளூர்: வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது

image

திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தை சேர்ந்தவர் நாசர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 28-ந்தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் நாசரிடம் கத்தி முனையில் ரூ.1000-ஐ பறித்து சென்றனர். இதுகுறித்து நாசர் அளித்த புகாரின் பேரில் சத்தியமூர்த்தி, சக்தி மற்றும் கிஷோர் குமார் ஆகிய மூவரை திருவேற்காடு போலீசார் நேற்று கைது செய்தனர்.

News March 31, 2024

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி 2.29 கோடி பறிமுதல்

image

பூந்தமல்லி அடுத்த கோலப்பஞ்சேரி சோதனை சாவடியில் நேற்றிரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த வேனை மடக்கி சோதனை செய்தபோது சுமார் 2 கோடியே 29 லட்ச ரூபாய் சிக்கியது. விசாரணையில் இந்த பணம் ஏடிஎம் மையத்தில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்டது என கூறப்பட்டது. ஆனால் உரிய ஆவணமில்லாததால் பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் பூந்தமல்லி கருவூலத்தில் ஒப்படைத்தனர்

News March 31, 2024

திருவள்ளூர் : தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட எம்எல்ஏ

image

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்-ஐ ஆதரித்து நேற்று இரவு திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரன் திருவள்ளூர் நகரம் வள்ளுவர்புரம் பகுதியில் இல்லம் தோறும் சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

News March 30, 2024

திருவள்ளூர்: 4.38 லட்சம் லிட்டர் ஆயில் பறிமுதல்

image

திருவள்ளூர் மாவட்டம் விச்சூர் கிராமம், S.P.நகர் பகுதியில் அரசு மானியத்துடன் வழங்கக்கூடிய, லாரி இன்ஜின்களுக்கு பயன்படுத்தும் கருப்பு ஆயிலை பதுக்கி கள்ள சந்தையில் விற்பதாக குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகளுக்கு நேற்று(மார்ச் 29) தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார் சுமார் 4.38 லட்சம் லிட்டர் ஆயிலை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.

News March 30, 2024

திருவள்ளூர்: துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு

image

திருவள்ளூர் நகராட்சியில் மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 100% வாக்களிப்பதன் அவசியம், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் செய்ய வேண்டிய ஜனநாயக குறித்து நேற்று (மார்ச் 29) பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் இந்த நிகழ்வில் துறைசார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.

News March 30, 2024

திருவள்ளூர்: துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு

image

திருவள்ளூர் நகராட்சியில் மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து நேற்று (மார்ச் 29) பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் இந்த நிகழ்வில் துறைசார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.

News March 29, 2024

திருவள்ளூர்: நாளை முழு வேலை நாள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான தொடக்க நிலை உயர்நிலை மேனிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை(மார்ச்.30) முழு வேலை நாள் என திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். எனவே நாளை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்படும்.

News March 29, 2024

ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

image

தமிழகத்தில் 39 தொகுதிகளில் வருகின்ற ஏப்ரல்.19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஏப்ரல்.19ஆம் தேதி அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

News March 29, 2024

காரில் எடுத்து சென்ற 4 லட்சம் பறிமுதல்

image

பொன்னேரி அடுத்த புதுவாயல் GNT சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கண்ணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழவேற்காட்டில் இருந்து கும்முடிபூண்டிக்கு சென்ற பெர்னார்டு என்பவரின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ. 4 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. பின்னர் அதனை கைப்பற்றிய பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!