India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 7,96,956 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பாலகணபதி, அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஸ் சந்தர் உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இதனால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்குன்றம் 6.3 சென்டிமீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தின் சராசரி மழை அளவு 17.55 மில்லி மீட்டர், பள்ளிப்பட்டு 2.5 சென்டிமீட்டர், சோழவரம் 2.7 சென்டிமீட்டர், பொன்னேரி 5.6 சென்டிமீட்டர், செங்குன்றம் 6.3 சென்டிமீட்டர், பூவிருந்தவல்லி 1.7 சென்டிமீட்டர், திருவள்ளூர் 2.3 சென்டிமீட்டர், ஊத்துக்கோட்டை 3.5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 5,72,156 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பாலகணபதி, தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் உள்ளிட்டோர் டெபாசிட் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் தொகுதியில் இறுதி சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 7,96,956 வாக்குகள் பெற்றார். 2-வது இடத்தில் பாஜக வேட்பாளர் பாலகணபதி 2,24,801 வாக்குகளும், 3-வது இடத்தில் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 2,23,904 வாக்குகளும், 4-வது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் 1,20,838 வாக்குகளும் பெற்றுள்ளனர். சசிகாந்த் செந்தில் 5,70,566 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜூன்- 4) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 7,94,608 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தப்படியாக பாஜக வேட்பாளர் பாலகணபதி 2,24,042 வாக்கு பெற்றுள்ளார். தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 2,23,550 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பெற்றார். வெற்றி பெற்ற காங் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரபுசங்கர் வெற்றி சான்றிதழை இன்று இரவு வழங்கினார்.
ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்தில் இன்று (ஜூன்-4) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்புக் கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச் சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆவடி காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணியை சேர்ந்த காங். வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 6,46,457 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட பாஜக வேட்பாளர் பால கணபதி 1,83,798 வாக்குகள் பெற்று 2 ஆம் இடம் பிடித்துள்ளார்.
பொன்னேரி அடுத்த பழவேற்காடு திருமலை நகரை சேர்ந்த மீனவர் பிரேம்குமார் கடந்த மாதம் 31ஆம் தேதி கடலில் தவறி விழுந்து காணாமல் போனார். இந்நிலையில் இன்று L&T கம்பெனி அருகில் காணாமல் போன பிரேம்குமாரின் உடல் ஒதுங்கி இருப்பதாக திருப்பாலைவனம் போலீசாருக்கு கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவம் இடம் சென்ற போலீசார் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் 20-வது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சசி காந்த் செந்தில் 5,88,695 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 1,66,618 வாக்குகளும், பாஜக வேட்பாளர் பாலகணபதி 1,68,121 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஸ் சந்தர் 86,564 வாக்குகளும் பெற்றுள்ளார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.