India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிக்குள் 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.திருவள்ளூர்.செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமென்டில் குறிப்பிடவும்
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு மற்றும் நாளை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பேத்கர் விருது பெற பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவர்கள், இதற்கான விண்ணப்பத்தினை திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் பெற்று உரிய ஆவணங்களுடன் வரும் நவம்பர் 26ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை கும்மிடிப்பூண்டி 65 மி.மீ., தாமரைபக்கம் 59 மி.மீ., செங்குன்றம் 37.6 மி.மீ., பொன்னேரி 36 மி.மீ., ஆவடி 34 மி.மீ., சோழவரம் 32 மி.மீ., பூந்தமல்லி 27மி.மீ ஊத்துக்கோட்டை 26 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
திருவள்ளூர் மாவட்ட பூமாலை வணிக வளாகத்தில் 40 அரங்கு வரை உள்ளடக்கிய விற்பனை கண்காட்சி நவ.15 முதல் நவ.24-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இக்கண்காட்சியில் பங்குபெற விருப்பமுடைய மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களது விற்பனை பொருட்கள் பற்றிய விவரத்தினை மேலாளர், மாவட்ட இயக்க மேலாண்மை எண்.04427664528, 9176099966 தொடர்பு கொண்டு விண்ணப்படிவத்தினை பெற்று நவ.14 முன்பு பதிவு செய்து பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டம் விஷ்ணுவாக்கம் ஊராட்சி மன்ற செயலராக உள்ள தசுருதின் என்பவர் குட்கா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். சொந்த ஊரில் அவர் மளிகைக் கடை நடத்தி வரும் நிலையில், கடையில் விற்பதற்காக குட்கா எடுத்துவந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, விஷ்ணுவாக்கம் ஊராட்சி மன்ற செயலராக உள்ள தசுருதீனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லியில் உள்ள தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள செல்வராஜ் (50) என்பவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் பாதுகாப்புடன் செல்வராஜுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.