India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (28.08.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர், மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அடுத்து இன்று நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பந்தலூரில் பெய்த கனமழை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு குழுவினர் பந்தலூர் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

நீலகிரி மக்களே, மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா? தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை காப்பீடு நிறுவனத்தில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

நீலகிரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி போக்குவரத்து துறை அதிகாரிகள், மாநில எல்லை வரை மட்டுமே கேரள பஸ்களை இயக்க வேண்டும். தமிழக எல்லைக்குள் உள்ள பாட்டவயல் சோதனை சாவடி வரை இயக்கக் கூடாது எனதெரிவித்து வருகின்றனர். இதனால் கேரள மாநிலம் சுல்தான் பத்தேரியில் இருந்து வரும் பஸ்கள், பயணிகளை வனத்திற்கு மத்தியில் இறக்கி விட்டு செல்லும் சூழல் உருவாகி வருகிறது.பயணிகளுக்கு வன விலங்குகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

நீலகிரி மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இதனை மறக்காமல் கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க.

குன்னூரில் சதுப்பு நிலம், பந்துமை நீர்பிடிப்பு பகுதியில் டைடல் பார்க்க அமைக்க அரசு நடவடிக்கைக்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்துக்கு நாளை நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறது. சதுப்பு நிலங்களில் கட்டுமானத்திற்கு வன பாதுகாப்பு சட்டத்தின்படி தடை உள்ளது என்று இயற்கை ஆர்வலர்கள் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

ஊட்டியில் இரவு நேரங்களில் உலாவரும் சிறுத்தை தெருவில் சுற்றித்திரியும் வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வருகின்றது. இந்நிலையில் ஓல்டு போஸ்ட் ஆபீஸ், வெஸ்டோடா பகுதியில் சிறுத்தை நடமாடியதை தொடர்ந்து நேற்று மாலை இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் குறித்து துல்லியமாக அறிந்து கொள்ளும் வகையில் தெர்மல் டிரோன் உதவியுடன் நகருக்குள் சுற்றும் சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.(ஷேர் பண்ணுங்க)

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு மதுரை கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
Sorry, no posts matched your criteria.