India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஆ.ராசா இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆ.ராசா, நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு 4வது முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியரின் கூடுதல் அலுவலக கட்டடத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்திட்ட உதவிகள் பெற 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் டிஜிபி உத்தரவிட்டார். இந்நிலையில், நீலகிரி எஸ்பி சுந்தரவடிவேல் விடுத்துள்ள செய்தி குறிப்பில், நீலகிரியில் போதைப்பொருள் புழக்கம், கள்ளச்சாராயம் தயாரிப்பு, விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் 10581 மற்றும் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் செயல்படும் 9789800100 எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்றார்.
பந்தலூர் அருகே ஏலமன்னா குடியிருப்புகளை ஒட்டிய பகுதியில் குட்டிகளுடன் யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு விவசாய தோட்டங்களில் புகுந்த யானைகள், இரவு ரமேஷ் குமார் என்பவரின் வீட்டின் தண்ணீர் டாங்கை இடித்து சேதப்படுத்தியதுடன், வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த சைக்கிள் மற்றும் பொருட்களை சூறையாடியுள்ளன. வனக்காப்பாளர் குணசேகரன் மற்றும் வருவாய் துறையினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் அடுத்த 2 (ஜூன் 25, 26) நாட்களுக்கு பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிய இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் கப்பட்சி வினோத் தலைமையில் இன்று பகல் 11:30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பு செயலாளர கே.ஆர்.அர்ஜூணன், மாவட்ட துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் சக்சஸ் சந்திரன், நகர செயலாளர் சண்முகம் உட்பட அதிமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள் பங்கேற்றனர்.
நீலகிரி, திருப்பூர் உட்பட 5 மாவட்டங்களில் இன்று(ஜூன் 24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வரும் நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கவும் வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், நீலகிரி உள்பட 20 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் சில மாதங்களுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இது பழமையான கட்டிடத்தின் பொலிவை பாதிக்கும் என்பதால் அதை அகற்ற சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து ஊட்டியில் பழைய கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், நேற்று(22.6.24) அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.