Thenilgiris

News January 18, 2026

நீலகிரி மாவட்டத்திற்கு எச்சரிக்கை

image

நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) இரவு அல்லது திங்கள்கிழமை(ஜன.19) உறைபனி நிலவ வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News January 18, 2026

ஊட்டியில் அதிரவைக்கும் சம்பவம்!

image

ஊட்டி புதுமந்து பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் ரமேஷ் என்பவர் பொங்கல் பண்டிகைக்காகக் கர்நாடகா சென்றிருந்த நிலையில், மர்ம நபர்கள் அவரது கடையின் கதவை உடைத்து கல்லாவிலிருந்த ரூ.7,500 மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவு கருவியைத் (DVR) திருடிச் சென்றுள்ளனர். நேற்று கடைக்குத் திரும்பிய ரமேஷ் இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், ஊட்டி மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

News January 17, 2026

நீலகிரி: ரேஷன் கார்டு வச்சுருக்கீங்களா?

image

நீலகிரி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE IT!

News January 17, 2026

BREAKING: நீலகிரியில் மண்ணில் புதைந்த 3 பேர்!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஒதனத்தி பகுதியில் கிணறு தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று இந்த பணியின் போது ஏற்பட்ட விபத்தில் 3 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்துள்ளனர். இதையடுத்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 17, 2026

நீலகிரி: கேஸ் சிலிண்டர் பயனாளர்கள் கவனத்திற்கு!

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 17, 2026

நீலகிரி: அரசு சேவைகள் இனி உங்கள் வாட்ஸ்அப்பில்!

image

நீலகிரி மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 17, 2026

நீலகிரி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

நீலகிரி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 17, 2026

நீலகிரி மக்களே உடனே செக் செய்யவும்!

image

நீலகிரி மக்களே, இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியாக உள்ள நிலையில் SIR பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், உடனே உங்களின் பெயர், வரிசை எண், தொகுதி என அனைத்தும் SMS-ல் வரும். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 17, 2026

டெல்லியில் ஜொலித்த கோத்தகிரி சிறுமி

image

டெல்லியில் நடைபெற்ற 39-வது தேசிய சப்-ஜூனியர் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில், கோத்தகிரியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி பிரணிதா (12) இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த அந்த மாணவி சொந்த ஊர் திரும்பியபோது, ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் அவருக்குப் பாராட்டு தெரிவித்து உற்சாகப்படுத்தினர்.

News January 17, 2026

பந்தலூர் அருகே அதிரடி: இருவர் கைது

image

பந்தலூர் அருகே சேரம்பாடி போலீசார் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். சேரங்கோடு சோதனைச் சாவடியைச் சேர்ந்த தங்கையா (63) என்பவரிடமிருந்து 80 மதுபாட்டில்களும், படச்சேரியைச் சேர்ந்த பெரியசாமி (39) என்பவரிடமிருந்து 22 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 102 மதுபாட்டில்களைக் கைப்பற்றி இருவரையும் சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!