Thenilgiris

News August 1, 2024

மேட்டுப்பாளையம் – உதகை ரயில் சேவை ரத்து

image

மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான ரயில் போக்குவரத்து வரும் 3ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஹில்கிரோ – ஆர்டர்லி இடையே ரயில் நிலையம் இடையே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அப்குதியில் உள்ள தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே, மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

News August 1, 2024

வயநாட்டில் நிவாரண பொருள்கள் ஒப்படைப்பு

image

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் ஏராளமான மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் அத்தியாவசிய பொருள்கள் நேற்று  சேகரிக்கப்பட்டன. இந்த நிவாரண பொருள்கள் கல்பெட்டா என்ற இடத்தில் அரசு முகாமில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஒப்படைக்கப்பட்டது.

 

News August 1, 2024

ஊட்டியில் மாவட்ட அளவு தடகள போட்டி

image

நீலகிரி மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்தியில், மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டி ஆக.21ம் தேதி ஊட்டி எச்.ஏ.டி.பி. திறந்தவெளி விளையாட்டு அரங்கில் நடக்கிறது. அதில் 14, 16, 18, 20 வயதிற்கு உட்பட்ட ஆண் – பெண் இருபாலரும் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள் – 94430 66112 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

News August 1, 2024

நீலகிரியில் மிக கனமழை

image

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே கலெக்டர் லட்சுமி பாவ்யா தன்னீரு, கனமழையால் நிலச்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

News August 1, 2024

நீலகிரி: நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

image

நீலகிரி குன்னூரை அடுத்த கரன்சி எஸ்டேட் பகுதியை சேர்ந்த ரவிசந்திரன் என்பவரது மகள் கவுசல்யா (26).இவர் கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் சூரமலையை சேர்ந்த விஜீஸ் குட்டன் (36) என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவனுடன் சூரமலையில் வசித்து வந்த நிலையில், அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கணவன் குழந்தையுடன் மூவரும் நேற்று உயிரிழந்தனர்.

News August 1, 2024

நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு: கலெக்டர்

image

நீலகிரியில் நேற்று (ஜூலை 31) முதல் நாளை வரை (ஆகஸ்ட் 2) வரை பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மேட்டுப்பாளையம் – உதகை – கூடலூர் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் நேற்று முதல் ஒரு வாரம் காலம் செல்வதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News July 31, 2024

சுற்றுலாப் பயணிகளுக்கு நீலகிரி கலெக்டர் முக்கிய அறிவுறுத்தல்

image

நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு சில இடங்களில் அதிகளவு மழைப்பொழிவு, நீரோடைகளில் நீர் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கவனமுடன் செல்லவும், பாதுகாப்பாக இருக்கவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவுறுத்தியுள்ளார்.

News July 31, 2024

நிலச்சரிவில் மரணம்: அமைச்சர் நேரில் நிதியுதவி 

image

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் மரப்பாலம் பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவர் நேற்று உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். அப்போது நீலகிரி கலெக்டர், திமுக மாவட்ட செயலாளர் முபாரக் உடனிருந்தனர்.

News July 31, 2024

நிலச்சரிவு மரணம்: அமைச்சர் நேரில் நிதியுதவி

image

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் அம்பேத்கர் நகரை சேர்ந்த கல்யாணகுமார் என்பவர் உயிரிழந்தார். இவரது குடும்பத்தினரை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமசந்திரன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அப்போது நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உடனிருந்தார்.

News July 31, 2024

நிலச்சரிவில் மாயமான நீலகிரி மாணவி

image

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்த சாமிதாஸ் என்பவரின் 9 வயது மகள் மாயமாகியுள்ளார். இந்த சிறுமி அங்குள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி பள்ளியில் படித்து வந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வயநாடு விரைந்துள்ள சாமிதாஸ் தனது மகளுக்காக கண்ணீருடன் காத்திருக்கிறார்.

error: Content is protected !!