Thenilgiris

News January 20, 2026

நீலகிரி: வீட்டிலிருந்தே இனி கட்டணம் செலுத்தலாம்!

image

நீலகிரி மக்களே, நீங்கள் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!<> TNEB செயலி<<>> அல்லது அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் கட்டணம் செலுத்துவது எளிது. உங்கள் பெயர் மற்றும் EB கணக்கு எண்ணை பதிவு செய்து, செலுத்த வேண்டிய தொகையை காட்டும். அதை UPI அல்லது Netbanking மூலம் செலுத்தலாம். மேலும் தகவல்களுக்கு, 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்புகொள்ளவும். இந்த தகவலை SAVE செய்து மற்றவருக்கு SHARE செய்யுங்கள்.

News January 20, 2026

நீலகிரி: 12-ம் வகுப்பு போதும்.. ஆதார் துறையில் வேலை!

image

நீலகிரி மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய +2 படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து தங்கள் மாநிலத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க!

News January 20, 2026

நீலகிரி: லஞ்சம் கேட்டாங்களா? இத பண்ணுங்க!

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnlgdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0423-2443962 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News January 20, 2026

நீலகிரியில் பயங்கரம்.. ஒருவர் அடித்துக் கொலை!

image

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அம்பமூலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாரங்கமூலா பழங்குடியின கிராமத்தில் கோபி என்பவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். டிஎஸ்பி கல்யாண் குமார், இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் தலைமையில் நடந்த விசாரணையில், இறந்தவரின் தங்கை மகன் சுதீஷ் என்பவர் மதுபானம் வாங்க பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில் மரக்கட்டையால் தாக்கி கோபியை கொன்றுள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News January 20, 2026

நீலகிரி: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். நீலகிரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0423-24442777, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free -1800 4252 441, சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)

News January 20, 2026

நீலகிரி: ரேஷன் கடையில் கைரேகை விழலையா?

image

நீலகிரி மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, நீலகிரி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழைக்கலாம். SHARE IT

News January 20, 2026

நீலகிரி: அதிகம் UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் 2.Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 20, 2026

நீலகிரி மக்களே உங்களுக்கு தான்.. SAVE பண்ணுங்க!

image

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை, கரடி, யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகாளல் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும், இவற்றால் அவ்வப்போது உயிர் பலியும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், நீலகிரி வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அவசர உதவி எண் தான் 1800 425 4343. இதில் வனவிலங்குகளின் நடமாட்டம், விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் அளிக்கலாம். SHARE IT!

News January 20, 2026

நீலகிரியில் குடும்ப பிரச்சனையால் விபரீதம்!

image

நீலகிரி மாவட்டம், குந்தலாடி பூதானகுன்னு பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்தவர் யோகராஜ் (38). இவர் நேற்று இரவு ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பந்தலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 20, 2026

சுற்றுலா ஆணையராக நீலகிரி மு.ஆட்சியர் பொறுப்பு ஏற்பு

image

தமிழக அரசு சமீபத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து ஆணையிட்டது. அதில் சுற்றுலா ஆணையர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனராக இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ் நேற்று முதல் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் முன்னாள் நீலகிரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர். நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா கட்டமைப்பை மேம்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா ஆர்வலர் மத்தியில் மேலோங்கி உள்ளது.

error: Content is protected !!