India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுருளி அருவியில் குளிக்க தினமும் 100க்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது யானைகள் கூட்டம் அடிக்கடி வந்து செல்கிறது. வெண்ணியாறு பகுதியில் யானைகள் முகாமிடுவது வாடிக்கையாகும்.அப்போது அருவி பகுதியை ஒட்டி யானைகள் திடீர் திடீரென வந்து செல்வதால் அருவியில் குளிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது என்பதில் வனத்துறை அதிகாரிகள் குழுப்பத்தில் உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் இன்று (ஜன.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
அனைத்து பகுதிகளிலும் இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு என முதல் இராணுவத்தைக் கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறியச் செய்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாளில் அவரது புகழைப் போற்றுவோம் என தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ் செல்வன் புகழாரம் சூட்டினார்.
ஆண்டிபட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அரசு மருத்துவமனை அருகே நின்றிருந்த கொப்பையம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் (51) என்பவரை விசாரணை செய்தபோது, அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 24 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1500 பணம் பறிமுதல் செய்தனர்.
கம்பம் வடக்குபட்டி பகுதியில் நேற்றிரவு 8 மணிக்கு 2 பெண்கள் ஒரு ஆண் என 3 பேர் கொண்ட கும்பல் வீடுகளில் புகுந்து கஞ்சா சோதனை நடத்துவது போல் நடித்து நாங்கள் என்.ஐ.பி.போலீஸ் எனக் கூறி பணம் பறித்துள்ளனர். இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பொதுமக்கள் சிலர் வடக்கு போலீசார் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். 3 பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று விசாரித்ததில் சின்னமனூரை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
உணவுப் பொருள் வளங்கள் சம்பந்தமாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் ஜன.25ஆம் தேதி பெரியகுளம் டி வாடிப்பட்டி கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் தேனி அருகே உள்ள வெங்கடாசலபுரம் நியாய விலை கடையில், ஆண்டிபட்டி சுப்புலாபுரம் நியாய விலை கடையில், உத்தமபாளையம் துரைசாமி புரம் பகுதியில் உள்ள துவக்க பள்ளி வளாகத்தில், போடியில் கோடாங்கி பட்டி நியாயவிலைக் கடையில் நடைபெறும். *ஷேர்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் தொழில் வல்லுநர் (Young Professional) பணியிடம் தொகுப்பூதியத்தில் தற்காலிக அடிப்படையில் (on Out Sourcing Basis) நிரப்பப்பட உள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://theni.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 24.01.25 அன்று காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. முகாமில் தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு காலி பணியிடங்களுக்கு வேலை நாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் விவரங்களுக்கு 7904706709 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பயன்பெற்று கொள்ளுமாறு என இன்று (ஜன.21) மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினமான ஜன.30 ஆம் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுவதை தொடர்ந்து ஜனவரி 30.01.2025 முதல் பிப்ரவரி 15.02.2025 வரை தேனி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஸ்பர்ட்ஸ் (தொட்டு அரவணைத்தல்) தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. தொழுநோய் விழிப்புணர்வு பணிகள், கண்டுபிடிப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.