India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செப். 17ம் தேதி நடைபெறும் விவரங்கள். இதில், தேனி அல்லிநகரம் நகராட்சி 17, 18 வார்டுகளுக்கு மல்லிகை மஹாலில் முகாம், போடி நகராட்சி 11, 13 வார்டுக்கு சேது மறவர் திருமண மண்டபத்தில் முகாம், தேனி அருகே கொடுவிலார்பட்டியில் வீரு நாகம்மாள் மண்டபத்தில் முகாம், பெரியகுளம் அருகே சருத்துபட்டியில் ஜெயமருதை மஹாலில் முகாம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

தேனி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கபட்டு, பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும், பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு மாவட்ட அதிகாரியை 04546-262112 அணுகலாம். SHARE பண்ணுங்க!

தேனியில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகளின் தொடர்பு எண்களை 2025 UPDATE செய்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. SAVE பண்ணுங்க தேனி மக்களே!
⏩ தேனி மாவட்ட ஆட்சியர் – ரஞ்சித் சிங் – 4546-253676
⏩ தேனி காவல்துறைக் கண்காணிப்பாளர் – சினேஹா ப்ரியா – 4546 254100
⏩ மாவட்ட வருவாய் அலுவலர் – மகாலெட்சுமி – 4546-254946
⏩ மாவட்ட திட்ட அலுவலர் – அபிதா ஹனிப் – 4546-254517
SHARE பண்ணுங்க!

தேர்தல் ஆணைய உத்தரவின் படி தேனி மாவட்டத்தில் 1200 வாக்காளர்களுக்கு உள்ள ஓட்டுச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியலை வெளியிட்டார். மாவட்டத்தில் கடந்த தேர்தலை விட 28 அமைவிடங்கள், 168 ஓட்டுசாவடிகள் அதிகரித்துள்ளன.மாவட்டத்தில் 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகள் பிரிக்கும் பணி முடிந்துள்ளது.

தேனி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <

தேனி மாவட்டத்தில் கடந்த 9 மாதங்களில் 49 பேர் குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் ரேஷன் பொருட்கள் கடத்தி கைதானவர்கள், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் என 15 பேரும், கஞ்சா, போதை பொருட்கள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட 27 பேர், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் செயல்பட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி தகுதி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025
விண்ணப்பிக்க <

பூதிப்புரத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் சிவக்குமார் 42. திருமணம் ஆகவில்லை. இவர் பூபால சமுத்திரக் கண்மாய் அருகே நஞ்சுண்ட ஈஸ்வரன் கோயில்வளாகத்தில் இறந்து கிடப்பதாக பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் உடலைகைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ரத்த அழுத்தம் காரணமாகஉயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

தேனி மாவட்டம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு கல்விக்கடன் முகாம் செப்டம்பர் 17ஆம் தேதி தேனி கம்மவார் சங்கர் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதற்காக கல்லூரி மாணவ மாணவிகள் தங்களுடைய அனைத்து ஆவணங்களையும் முகாமுக்கு கொண்டு சென்று பயன் பெறலாம் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையில், இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை, மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.