India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் இன்று பெரியகுளம், போடி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) செய்யலாம். அவசர உதவிக்கு 100 காவல் கட்டுப்பாட்டு அறை 04546-250100 – 8870985100 டயல் செய்யலாம் என்று தேனி மாவட்ட போலீசார் தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் இன்று 30.01.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
ரயில்வே பணிகளுக்காக பிப்.01 அன்று தேனி பழைய பேருந்து நிலையம் பெரியகுளம் சாலையில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங் கேட்டும், ஜன.31 அன்று நள்ளிரவு 12:30 மணி முதல் அதிகாலை 3:30 மணி வரை தேனி வன அலுவலகம் பங்களா மேடு சாலையில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங் கேட்டும் மூடப்படும். மேற்குறிப்பிட்ட நேரங்களில் அவ்வழியை தவிர்த்து மாற்றுப்பாதையில் பயணிக்கும்படி ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தேனி பழைய பேருந்து நிலையம் அருகே ஹேப்பி ஸ்ட்ரீட் எனும் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறும் என தனியார் அமைப்பு நிகழ்ச்சிக்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. இது மக்கள் மத்தியில் அதிருப்தி எழ இன்று(ஜன.30)மாவட்ட எஸ்.பி.அலுவலகம் தரப்பில் இருந்து இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாவட்ட மக்கள் காவல்துறைக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
சின்னமனூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் கண்ணன் இன்று (ஜன.30) நகர் பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் தேநீர் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். இதில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தும், வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த தரம் இல்லாத உணவுப் பொருட்களை கைப்பற்றியும் 3000 ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் கடை லைசன்ஸ் இல்லாத கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினார்.
ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி தலைவர் பதவி 2020.ல் பட்டியலின பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டது. இவ்வூரை சேர்ந்த பழனிசாமி மனைவி மகேஸ்வரி பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அதை மறைத்து பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் என போலி ஜாதி சான்றிதழை வழங்கி வெற்றி பெற்றார். இது குறித்து எதிர்த்து போட்டியிட்ட சின்னத்தாய் அளித்த புகாரில் தேவதானப்பட்டி போலீசார் மகேஸ்வரி மீது நேற்று (ஜன.29) வழக்கு பதிவு செய்தனர்.
தேனி மாவட்டத்தில் இன்று 29.01.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி எம்பியும், மாவட்ட செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வனின் அலுவலகத்தில் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப், கணிணிகள், ஹார்ட் டிஸ்க், பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையர்களை கைது செய்வதற்காக போலீசார் தீவிர விசாரணை; நகரில் வாகன சோதனையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
கூடலூர், நாராயணதேவன்பட்டியில் உள்ள மந்தையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகன் அஜய்(24). கடந்த 2 தினங்களுக்கு முன்னர், அஜய் வீட்டில் உணவு சாப்பிட்டபோது திடீரென அவருக்கு புரையேறியது. அவரது குடும்பத்தினர் முதலுதவி செய்தும் சரியாகவில்லை. கம்பம் அரசு மருத்துவமனையில் அஜயை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்தாக தெரிவித்தனர். கூடலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கம்பம் சுருளிபட்டியை சேர்ந்தவர் ஆனந்தபிரபு. இவர் தன்னிடம் நெடுஞ்சாலைத் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி அருண்யா, சசிகுமார் ஆகியோரிடம் ரூ.13.85 லட்சத்தை பெற்றுக்கொண்டு போலி பணி நியமன ஆணையை வழங்கி மோசடி செய்ததாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அருண்யா, சசிக்குமார் மீது போலீசார் நேற்று(ஜன.28) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.