Theni

News April 2, 2024

“துணிப்பை தூக்கத் துணிவோம் ” விழிப்புணர்வு

image

தேனி-அல்லிநகரம் நகராட்சி தென்றல் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நன்செய் அறக்கட்டளை மற்றும் வாசவி கிளப் இணைந்து இன்று “துணிப்பை தூக்கத் துணிவோம் ” விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது, இந்நிகழ்வில் தன்னார்வலர்கள் ஜீவிதா, லோகேஷ், ரிஷப், கலந்து கொண்டு மாணவ செல்வங்களுக்கு துணிப்பைகளையும் , புத்தகங்களையும் வழங்கினார்.

News April 2, 2024

தேனியில் மிதமான மழை

image

நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆண்டிபட்டி, தேனி, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

News April 2, 2024

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர் சரிவு

image

முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இன்மை காரணமாக அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று போனது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணை நீர்மட்டம் 116.20 அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து முற்றிலும் இல்லை. அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 511 கனஅடி தண்ணீர் மட்டும் திறந்து விடப்படுகிறது.

News April 2, 2024

வைகை ஆறு வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

image

வெள்ளிமலை வனப்பகுதியில் மழையின்மை மற்றும் வெயில் தாக்கம் காரணமாக வைகை ஆறு வறண்டு போனது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குடிநீருக்காக வைகை ஆற்றை சார்ந்துள்ள கடமலை – மயிலை ஒன்றியத்தை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாடு அபாயத்தை போக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News April 2, 2024

கம்பம் அருகே விபத்து: ஒருவர் காயம்

image

லட்சுமி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபிரபு. கொத்தமல்லித்தழை வியாபாரம் செய்து வரும் இவர் நேற்று கூடலூர் சென்று ஒரு தோட்டத்தில் கொத்தமல்லிக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு தனது டூவீலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கம்பம் பைபாஸ் ரோட்டில் வந்த போது  எதிரே வந்த ஜீப் மோதியது. ஜெயபிரபு தலையில் பலத்த காயமடைந்து மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 2, 2024

16 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார்.

image

பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் நேற்று (ஏப்.1) ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வடுகபட்டி பகவதி அம்மன் கோவில் தெருவில் நின்று கொண்டிருந்த ராஜ்குமார் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சட்டவிரோதமாக விற்பனைக்காக மது பாட்டில்களை வைத்திருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 1, 2024

தேனி: ஆட்சியர் ஆய்வு

image

போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூதிபுரம் பேரூராட்சி ஆதிபட்டி பகுதியில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி தகவல் சீட்டு வீடு வீடாக சென்று விநியோகிக்கும் பணி இன்று (ஏப்.1) நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.

News April 1, 2024

வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2024 மக்களவை தேர்தலையொட்டி வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா இன்று (01.04.2024) தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

News April 1, 2024

தேனி: 1,202 கன அடி நீர் வெளியேற்றம்

image

ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து கடந்த சில நாட்களாக மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஒருபோக பாசன நிலங்களுக்கு தண்ணீர் முறை பாசனத்தின் படி திறந்து விடப்பட்டு வருகிறது. இதில் கடந்த சில நாட்களாக ஒருபோக பாசன நிலங்களுக்கு நிறுத்தப்பட்ட தண்ணீர் இன்று 1,130 கன அடி தண்ணீர் பாசனத்திற்கும், 72 கனஅடி தண்ணீர் குடிநீருக்கும் மொத்தம் 1,202 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

News April 1, 2024

ரூ.1கோடி மோசடி மூன்று பேர் மீது வழக்கு

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரவிக்னேஷ். இவர் தேனி எஸ்.பி இடம் தனது தங்கை மற்றும் அவரது உறவினர்கள் 8 பேரிடம் பள்ளிக் கல்வித் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி கனகதுா்கா, சூா்யா, சரண்யா ஆகியோர் மொத்தம் ரூ.1,11,21,000 பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணைகளை வழங்கி மோசடி செய்ததாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் 3 பேர் மீதும் நேற்று (மார்.31) போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!