India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரியகுளம் வட்டம், இலட்சுமிபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் செப்.10 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் செப்.11 தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு, மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்குபெற விருப்பமுள்ள மாணவர்கள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக சுற்று அறிக்கை அனுப்பி அந்தந்த பள்ளியின் வாயிலாக பங்கு பெறலாம்.

ஜி.கல்லுப்பட்டி அருகே கோட்டார்பட்டியைச் சேர்ந்தவர் ரோஹிணி (67). இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பினை தங்களுக்கு வழங்க வேண்டும் என அவரது மகன் ஆனந்தகுமார் அருவாளால் ரோஹிணியை வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு உடந்தையாக அவரது மனைவி ஐஸ்வர்யா சகோதரி மரகதம் ஆகியோர் இருந்துள்ளனர். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் ஆனந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்ட வனத்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட TCU 9206 இலுவை வாகனம் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 19 ம் தேதி காலை
11.00 மணிக்கு தேனி மாவட்ட வன அலுவலக வளாகத்தில் வைத்து பொது ஏலம் விடப்படவுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் சரக்கு மற்றும்
சேவை வரி வாகனத்திற்கு 18% முழுவதையும் அரசுக்கு ரொக்கமாக செலுத்தி வாகனத்தை ஏலத்தில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது.

கூடலூர் பகுதியை சேர்ந்த நாகராணி என்பவர் தனது வீட்டின் அருகில் வசித்து வரும் நடராஜன் (80) என்பவர் தனது 7 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2020 கொடுத்த புகாரின் அடிப்படையில் கூடலூர் போலீசார் நாகராஜனை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை தேனி மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் வழக்கின் தீர்ப்பாக இன்று நடராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு இன்று தேனி மாவட்ட எஸ்பி அலுவலக கூட்டரங்கில் எஸ்பி சிவபிரசாத் தலைமையில் ஏடிஎஸ்பி சுகுமார் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் விநாயகர் சிலைகளை எவ்வாறு வழிபடுவது, சிலைகளை எப்படி கரைப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை செய்தனர். இந்து எழுச்சி முன்னணி, இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர்.

தேனி தாலுகா அலுவலகம் அருகே உழவர் சந்தை அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 70 கடைகள் உள்ள நிலையில் அதில் காலை 6 மணி முதல் 10.30 மணி வரை வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதில் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள், பொதுமக்கள் காய்கறி மற்றும் பழங்கள் வாங்கி செல்கின்றனர். கடந்த மாதத்தில் 1090 டன் காய்கறிகள் ரூ.4.60 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

சின்னமனூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்களது நிலங்களில் வரப்பு ஓரங்களில் நடவு செய்ய “நொட்சி கன்றுகள்” இலவசமாக வழங்கப்படுகின்றன. தேவைப்படும் விவசாயிகள் சிட்டா, ஆதார் நகல்களை சின்னமனூர் வேளாண் விரிவாக்க மையத்தில் கொடுத்து நொட்சி கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம் என வேளாண் விரிவாக்க மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுருளி அருவி பகுதியில் யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்து வருகின்றது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர். கோவை மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கெம்மாரம்பாளையம் பகுதியில் யானைகள் தொந்தரவை தடுக்க ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது போல் சுருளி அருவியிலும் பயன்படுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட உதவி பாதுகாப்புக் குழு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் செப்.13க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவம் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. நிறைவு செய்த விண்ணப்பத்தை மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, மாவட்ட நீதிமன்றம், லட்சுமிபுரம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட நீதிபதி தகவல் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று (செப்.,3) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி மாவட்டத்திலும் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படலாம். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.