Theni

News January 9, 2026

தேனி: காய்கறி தரகர் வெட்டிக் கொலை…!

image

கோம்பையை பகுதியை சோ்ந்தவா் ராஜ்குமாா். இவர் காய்கறி தரகராக வேலை செய்கிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் சின்னஓவுலாபுரம் செல்லும் சாலையில் இவா் பலத்த காயங்களுடன் கீழே விழுந்து கிடந்தாா். அவரை மீட்டு GH-ல் அனுமதித்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்வகள் தெரிவித்தனா். உடலில் வெட்டு காயங்கள் இருந்ததால் அவரை மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை.

News January 9, 2026

தேனி: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

தேனி மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News January 9, 2026

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் தங்களுடைய சுயவிவரங்கள் இன்றி புகார் செய்வதற்கு உடனடியாக “Drug FreeTN” என்ற செயலியை (Mobile App) பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா ப்ரியா தெரிவித்துள்ளார்.

News January 9, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (08.01.2026) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News January 8, 2026

தேனியில் இளைஞர் விளையாட்டுப் போட்டி; ரூ.6,000 பரிசு!

image

இளைஞர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ‘முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – 2026’ போட்டிகள் வரும் ஜன.22 முதல் பிப்.08 வரை நடைபெற உள்ளது. https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜன. 21-க்குள் பதிவு செய்ய வேண்டும். மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.6,000 வரை பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

News January 8, 2026

தேனி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 8, 2026

தேனி: ரூ.1 லட்சம் சம்பளம்.. INDIAN OIL நிறுவனத்தில் வேலை..!

image

தேனி மக்களே, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மொத்தம் 8 விதமான பணிகளுக்கு 394 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12th, டிப்ளமோ படித்தவர்கள் ஜன.09க்குள் இங்கு <>கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை வழங்கப்படும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News January 8, 2026

தேனி: ஓடும் பஸ்ஸில் 19 பவுன் நகை அபேஸ்..

image

வத்தலகுண்டு பகுதியை சேர்ந்தவர் சுமிதா. இவா் நேற்று (ஜன.7) தேனியிலிருந்து வீரபாண்டிக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளாா். வீரபாண்டியில் பேருந்தில் இருந்து கீழே இறங்கிப் பாா்த்த போது சுமிதாவின் பையில் வைத்திருந்த 19 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 8, 2026

தேனி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்

2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.

3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.

4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணு

News January 8, 2026

தேனி: ஆந்திரா இளைஞரிடம் ரூ.25 லட்சம் மோசடி…

image

குள்ளபுரத்தை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது நண்பர் ஆந்திராவைச் சார்ந்த சீனு டிப்ளமோ படித்துள்ளார். இவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கிருஷ்ணன், பிச்சைமணி இருவரும் சேர்ந்து ராயப்பன்பட்டியைச் சேர்ந்த மாதவனை, சீனுவிற்கு அறிமுகம் செய்து வைத்தனர். இதையடுத்து சீனுவிடம் மாதவன் வேலை வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் வாங்கி ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து மாதவன் மீது ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

error: Content is protected !!