India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டம், வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழா மே 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 10ஆம் தேதி நடைபெறுவதால் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அரசு துறைகள் மற்றும் அனைத்து விதமான கல்விநிலையங்களுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் பகுதியில் இன்று காலை அல்லிநகரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியகுளம் அருகே வடுகப்பட்டியைச் சேர்ந்த தெய்வேந்திரன் (37) அரசு அனுமதியின்றி ரூ. ஒரு லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 900 மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 900 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மூணாறில் மாவட்ட சுற்றுலாத்துறைக்கு சொந்தமான தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி இன்று (மே.1) துவங்குகிறது. இதில், வெளி நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வகை பூக்கள் உள்பட 1500 வகை வண்ண பூக்கள் பூங்காவை அலங்கரித்து வருகின்றன. இன்று துவங்கும் இந்த கண்காட்சி மே.12 வரை நடைபெற உள்ளது. மலர் கண்காட்சி நடக்கும் நாட்களில் மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
ஜெயமங்களம் போலீசாரால் கடந்த 2018-ம் ஆண்டு சங்கீதா என்பவரை கொலை செய்த வழக்கில் சங்கீதாவின் கணவர் மலைச்சாமி, மாமனார் ராமன், மாமியார் செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டு அந்த வழக்கு விசாரணை தேனி மாவட்டம் மகிளா நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பாக குற்றவாளிகள் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி கோபிநாதன் தீர்ப்பளித்தார்.
மேகமலை காடுகள் ஏலக்காய் தோட்டங்களும், தேயிலை தோட்டங்களும் நிறைந்த இடமாகும். சுருளி அருவியின் பிறப்பிடமான மேகமலை, பசுமைமாறா காடுகள், தாவரங்கள், பறவைகள், விலங்குகள், காட்டு எருமைகள், மான்கள், புலிகள் போன்றவையை பார்வையிட ஏற்ற சுற்றுலாத் தலமாகும். மேகமலை புலிகள் சரணாலயம் 1016 சகிமீ பரப்பள கொண்டது. உலகில் உள்ள 36 பல்லுயிர் பெருக்கம் நிறைந்த பகுதிகளில் மேகமலை புலிகல் காப்பகமும் ஒன்று.
மேகமலை காடுகள் ஏலக்காய் தோட்டங்களும், தேயிலை தோட்டங்களும் நிறைந்த இடமாகும். சுருளி அருவியின் பிறப்பிடமான மேகமலை, பசுமைமாறா காடுகள், தாவரங்கள், பறவைகள், விலங்குகள், காட்டு எருமைகள், மான்கள், புலிகள் போன்றவையை பார்வையிட ஏற்ற சுற்றுலாத் தலமாகும். மேகமலை புலிகள் சரணாலயம் 1016 சகிமீ பரப்பள கொண்டது. உலகில் உள்ள 36 பல்லுயிர் பெருக்கம் நிறைந்த பகுதிகளில் மேகமலை புலிகல் காப்பகமும் ஒன்று.
ஆந்திர மாநிலத்தில் மே.13, கா்நாடகத்தில் மே.7 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. எனவே தேனி மாவட்டத்தில் தொழிற்சாலை, வா்த்தக நிறுவனங்கள், கடைகள், தோட்டங்களில் பணியாற்றும் ஆந்திரா, கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் தோ்தலில் வாக்களிக்க தொழில் நிறுவனங்கள், தோட்ட உரிமையாளா்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கறிக்கோழிகள், கோழிக்குஞ்சுகள், கோழிமுட்டைகள் , வாத்துக்கள், தீவனங்கள் மற்றும் இதர கோழிப்பண்ணையை சார்ந்த பொருட்கள் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி. சஜீவனா தெரிவித்துள்ளார். எல்லைப் பகுதிகளான குமுளி, கம்பம் மெட்டு மற்றும் போடி மெட்டு ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் அருகே உள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதில் அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
தேனி மாவட்டம், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட சத்திரப்பட்டி பகுதியில் ஆட்டுக் கொல்லி நோய் சிறப்பு தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். இம்முகாமில் மண்டல இணை இயக்குநர் கோயில்ராஜா , உதவி இயக்குநர்கள் பாஸ்கரன், சுப்ரமணியன், சிவரத்னா உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.