India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.தேனி – 9445000330
2.பெரியகுளம் – 9445000331
3.ஆண்டிப்பட்டி- 9445000332
4.உத்தமபாளையம்- 9445000333
5.போடிநாயக்கனூர்- 9445000334
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

அனுமதியற்ற மனைப்பிரிவு வரமுறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் <

தேனி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தலைமையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஜன.20 (செவ்வாய்) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தேனி, போடி மற்றும் ராசிங்காபுரம் மின் உபகோட்டங்களை சேர்ந்த மின் நுகர்வோர்கள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மின்வாரியத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

பெரியகுளத்தில் உள்ள TMB-யில் திண்டுக்கலை சேர்ந்த சரவணக்குமார், இவரது நண்பர் ஆனந்தகுரு இணைந்து 30 பவுன் நகைகளை அடகு வைத்து ரூ.17 லட்சம் கடன் பெற்றனர். கடன் தேதி முடிந்ததும் நகைகளை திருப்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த வங்கி மேலாளர் விவேக் சோதனை செய்ததில் நகைகள் போலி என தெரியவந்தது. இதுகுறித்து விவேக் அளித்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வங்கி நகை மதிப்பீட்டாளர் விக்னேஷ் உட்பட 3 பேரை கைது செய்தனர்.

தேனி மாவட்டத்தில தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம், சின்னமனூர், போடி, தேவாரம் ஆகிய 7 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. இன்று (சனிக்கிழமை) உழவர் திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு உழவர் சந்தைகள் இன்று (ஜன.17) இயங்காது எனவும், நாளை (ஜன.18) வழக்கம் போல் செயல்படும் என உழவர் சந்தை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டியை சேர்ந்தவர் மகாராஜன். இவர் ஜன.10 அன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி போதுமணி மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு GH-ல் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு.

தேனி மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ibpsreg.ibps.in/nabhindec25/ – என்ற தளத்தில் பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

அல்லிநகரம் பகுதியில் வசித்து வருபவர் தெய்வராஜ் (31). இவருக்கும் இவரது மனைவி கவிதாவுக்கும் (29) கடந்த ஜன. 14ம் தேதி ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியே வந்த தெய்வராஜ், மது பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி மூடியில் திரி வைத்து தீ மூட்டி மனைவி கவிதாவை நோக்கி எறிந்துள்ளார். இதில் கவிதா விலகியதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பெயரில் தெய்வராஜை அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (21). இவர் நேற்று முன்தினம் (ஜன.15) அவரது பைக்கில் ஆண்டிபட்டியில் இருந்து தேனிக்கு சென்றுள்ளார். பைக் அதிவேகமாக சென்ற நிலையில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேல்முருகன் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ என்னும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த செயலியில் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை இங்கே கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SHARE IT
Sorry, no posts matched your criteria.