India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆண்டிபட்டி க.விலக்கு பகுதியை சேர்ந்த தம்பதியர் தெய்வேந்திரன், சங்கீதா. தெய்வேந்திரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் சில தினங்களுக்கு முன் கணவருடன் கோபித்துக் கொண்டு சங்கீதா பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதனால் மன வேதனையில் இருந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் விசாரணை.

தேனி மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.இங்கு <
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!

போடி பகுதியை சேர்ந்தவர் மதன்பிரபு. இவர் நேற்று முன் தினம் இரவு பைக்கில் தேவாரம் சாலையில் சென்றுள்ளார். அப்போது இவரை வழிமறித்த ஒருவர் தான் போலீஸ் எஸ்.ஐ எனக்கூறி பைக்கிற்கு உரிய ஆவணங்கள் இல்லை என ரூ.2,000 பெற்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மதன்பிரபு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து போடி தாலுகா போலீசார் போலீஸ் என கூறி ஏமாற்றிய சதீஷ்குமார் (42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567 230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

தேனி, அன்னஞ்சி விளக்கு முதல் வீரபாண்டி வரை செல்லும் புறவழிச் சாலையில் வீரப்ப அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு செல்லும் சாலையில் நேற்று பெரியகுளத்தில் இருந்து தேனி நோக்கி சென்ற டிராக்டர், தேவதானப்பட்டிக்கு பைக்கில் சென்ற சந்துரு (20) மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சந்துரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் தேனி GH-க்கு அனுப்பி வைத்தனர்.

வேளாண் அடுக்ககம் திட்டத்தில் வேளாண்மைத்துறை சார்ந்த அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஒவ்வொரு விவசாயிக்கும் அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தேனி மாவட்டத்தில் PM Kisan நிதி பெறும் 27,320 பயனாளிகளில் இதுவரை 22,503 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத 4817 பயனாளிகள் PM Kisan நிதியினை தொடர்ந்து பெற வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் அழைப்பு.

போடி திருமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் உதயசூரியன். இவரது மகன் பாண்டி கண்ணன் (28). மகனுக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால், திருமணம் செய்ய தற்போது விருப்பம் இல்லை என பாண்டி கண்ணன் கூறி வந்துள்ளார். தொடர்ந்து பெற்றோர்கள் வற்புறுத்தியதால் மனம் உடைந்த பாண்டி கண்ணன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி போலீசார் வழக்குப்பதிவு.

தேனி மாவட்டத்தில் இன்று 23.01.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று 23.01.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று 23.01.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.