Theni

News June 9, 2024

தேர்வை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

image

தமிழகம் முழுவதும் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-4 தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் 154 மையங்களில் குரூப் -4 தேர்வு நடைபெறுகின்றது. தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட தேனி மேரி மாதா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுபவர்களின் நடவடிக்கை குறித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

News June 9, 2024

சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

image

தேனியில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்கில் தொடர்புடைய நபர்களை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், குற்றவாளிகளை பிடிக்க உறுதுணையாக இருந்த கைரேகை பிரிவு காவல்துறையினர் ஆகியோர்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் வாழ்த்து தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.

News June 9, 2024

சேதம் அடைந்த நிலையில் பள்ளி கட்டிடம்

image

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து நாளை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள 7-ம் வகுப்பு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. பள்ளி திறப்பதற்கு முன் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி கட்டங்களை ஆய்வு செய்து சீரமைக்க கல்வித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர், மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News June 9, 2024

மக்கள் நீதிமன்ற முகாம்களில் 6,449 வழக்குகளுக்குத் தீா்வு

image

தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையம் ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நேற்று (ஜூன்.8) நடைபெற்றது. இதில் நீண்ட காலம் நிலுவையில் இருந்த வழக்குகள் சமாதானம் செய்யக் கூடிய குற்ற வழக்குகள், உரிமையியல் வழக்குகள், விபத்து இழப்பீடு, காப்பீடு, வங்கிக் கடன், காசோலை, ஜீவனாம்சம் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மொத்தம் 6,449 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன.

News June 8, 2024

குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

image

குரூப்-1 க்கான முதல்நிலைத் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு 11.06.2024  முதல் துவங்கப்படவுள்ளது. மேலும் விபரங்களுக்கு மையத்தை நேரிலோ அல்லது 6379268661
என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு தேனி மாவட்ட
ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 8, 2024

இணையதளம் மூலம் நில அளவை விவரங்கள்

image

தமிழ்நாடு நிலஅளவை, நிலவரித்திட்டத்துறை www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை NIC மூலம் உருவாக்கியுள்ளது. அதில் பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணையவழி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் மற்றும் “தமிழ் நிலம்” செயலி
மூலம் நில அளவைத் தொடர்பான விவரங்களைப் பார்வையிட்டு பயனடையலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 8, 2024

முன்னாள் ராணுவ வீரருக்கு அரிவாள் வெட்டு

image

தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் காமாட்சி. இவரது மகன் ரமேஷிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பால் வாங்க சென்ற சுவேதாவிடம் காமாட்சி தகராறில் ஈடுபட்டதால் அவரை ராம்குமார் அரிவாளால் வெட்டியுள்ளார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 8, 2024

தேனி: கண்காணிப்பு குழு அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வினை கண்காணித்திட வட்டத்திற்கு ஒரு துணை ஆட்சியர் நிலையில் 5 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 154 முதன்மை கண்காணிப்பாளர்கள், 2044 அறை கண்காணிப்பாளர்கள், 41 இயக்க குழுக்கள், 7 பறக்கும் படை, வீடியோ கிராபர் மொத்தம் 159 நபர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். 

News June 8, 2024

தேனி கலெக்டர் அதிரடி உத்தரவு

image

தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் வருவாய்த்துறைக்கு விண்ணப்பிக்கப்படும் பல்வேறு விண்ணப்பங்களுக்கு 16 நாட்களுக்குள் தீர்வு கிடைத்திடும் வகையில் அதனை கண்காணிக்க தாலுகா வாரியாக 5 அலுவலர்களை நியமித்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். மேலும் விண்ணப்பங்களை வரிசை அடிப்படையில் பரிசீலனை செய்து முடிவு செய்யப்படுவதை கண்காணித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 8, 2024

வருமான வரி செலுத்துபவரா நீங்க

image

தேனி வருமானவரித்துறை மூலம் பழனிசெட்டிபட்டியில் உள்ள ஏ.பி.எம் ஹோட்டலில் ஜூன் 11 அன்று வருமான வரி செலுத்துபவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் டிஜிட்டல் முறையில் வரி செலுத்துபவர்களின் கடமைகள், வரி செலுத்துவதில் உள்ள சிரமங்கள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு தேனி வருமானவரித்துறை அறிவித்துள்ளது. 

error: Content is protected !!