Theni

News October 31, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

தேனி மாவட்டத்தில் இன்று (31.10.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 31, 2024

வைகை அணையில் மூழ்கிய இளைஞர்; தேடுதல் பணி தீவிரம்

image

பெரியகுளம் அருகே காமக்காப்பட்டி பகுதியில் வைகை அணை பின்புறம் நீர் பகுதியில் குளிக்க சென்று இளைஞர் நேரில் மூழ்கியதால் தகவலைத்தொடர்ந்து பெரியகுளம் தீயணைப்புத் துறையினர் இளைஞரின் உடலை வைகை அணை பகுதியில் தீவிரமாக தேடி வருகின்றனர் மேலும் தற்போது மழை பெய்து வருவதாலும் அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால் நீரில் மூழ்கிய இளைஞரை உடலை மீட்பதற்காக தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

News October 31, 2024

கம்பத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!

image

கம்பம் பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்லக்கூடிய தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை போன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் பகல் 12.15 மணியிலிருந்து இல்லாத நிலையில் பயணிகள் மற்றும் வெளியூர் பயணிகள் குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல முடியாத நிலையில் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். பின் ஓரிரு பஸ் வர வர கூட்டம் அலைமோதியது. பண்டிகை கால நேரத்தில் கூடுதல் பஸ் இயக்கினால் என்ன? பயணிகள் கேட்க தொடங்கினர்.

News October 31, 2024

தீபாவளி பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்

image

➤எளிதில்‌ தீப்பற்றும்‌ ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கக்‌ கூடாது
➤கம்பி மத்தாப்பு, புஸ்வாணம்‌, சங்கு சக்கரம்தானே என வீட்டுக்குள்‌ வெடிக்கக்‌ கூடாது.
➤ வெடிகளை வெடிப்பதற்கு நீண்ட கைப்பிடி கொண்ட ஊதுவத்திகளைப்‌ பயன்படுத்த வேண்டும்‌
➤ வாளியில்‌ தண்ணீரை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்‌
➤ தீக்காயம்‌ ஏற்பட்டால்‌ சுயமாக மருந்துகளை எடுத்துக்‌ கொள்ளாமல்‌ மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும்‌.
SHARE IT!

News October 30, 2024

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 30.10.2024 இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் உதவி தேவையுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

News October 30, 2024

முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்த எம்.பி

image

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.8 கோடியே 66.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய விளையாட்டு அரங்கம் அமைத்துக் கொடுத்ததற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் தனது நன்றியை தெரிவித்தார்.

News October 30, 2024

தேவருக்கு தேனி எம்.பி புகழாரம்

image

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா இன்று (அக்.30) நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் தனது முகநூல் பக்கத்தில்; இந்திய விடுதலைப் போராட்டத்தில் நேதாஜியோடு கரம் கோர்த்து போராடியவரும், சமத்துவமிக்க சமுதாயம் உருவாக்கிட தொண்டாற்றியவருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தி தினம் இன்று என குறிப்பிட்டுள்ளார்.

News October 30, 2024

போதையில் தகராறு; போலீசார் விசாரணை

image

பூதிப்புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சம்பவ நாள் அன்று நண்பர்களுடன் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜ்குமாரை நண்பர்கள் கத்தியால் வெட்டியதில் கையில் துண்டிக்கப்பட்டது. படுகாயமடைந்த ராஜ்குமார் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று(அக்.29) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 30, 2024

தேனி எம்.பிக்கு புதியதோர் பொறுப்பு!

image

இந்திய இரயில்வே துறையின் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேனி வடக்கு மாவட்ட செயலாளரும் தேனி பாராளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ் செல்வன் இந்திய இரயில்வே துறையின் ஆலோசனை குழுவிற்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவருக்கு திமுக நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

News October 30, 2024

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 29.10.2024 செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!