India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். தகுதியுள்ளவர்கள் வரும் பிப்ரவரி 16ம் தேதி மாலை 5:30 மணிக்குள், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டும். *ஷேர் பண்ணுங்க

தேனி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <

தேனி மாவட்டத்தில் இணையம் (ம) மொபைல் பயன்பாடுகள் மூலம் போலியான கடன் செயலிகள் (ம) மோசடி தொலைபேசி அழைப்புகள் அதிகரித்து வருகின்றது. எனவே, பொதுமக்கள் தங்களது மொபைல்களில் போலி கடன் செயலிகள் மற்றும் பணம் மோசடி அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற குற்றங்கள் நிகழ்ந்தால் 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE

தேனி மாவட்டத்தில் இணையம் (ம) மொபைல் பயன்பாடுகள் மூலம் போலியான கடன் செயலிகள் (ம) மோசடி தொலைபேசி அழைப்புகள் அதிகரித்து வருகின்றது. எனவே, பொதுமக்கள் தங்களது மொபைல்களில் போலி கடன் செயலிகள் மற்றும் பணம் மோசடி அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற குற்றங்கள் நிகழ்ந்தால் 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE

தேவதானப்பட்டி அருகே இளம்பெண் பிப்.9 அன்று கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜெயமங்கலம் போலீசார் ராஜாவை கைது செய்தனர். விசாரணையில் அவர் எங்களுக்குள் 6 வருடங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அவரது தாயார் அவருக்கு வேறு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்து மாரியம்மாளை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக ராஜா வாக்குமூலம் அளித்தார்.

தேனி மாவட்டத்தில் இன்று (10.02.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <

ஆண்டிபட்டி குமாரபுரம் மயானம் அருகே சார்பு ஆய்வாளர் ரஞ்சித் தலைமையிலான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த இருவரை பிடித்து சோதித்தபோது, அவர்களிடம் 100 போதை மாத்திரைகள் (Tapentadol) இருப்பது தெரிந்தது. விசாரணையில் என்ஜிஓ நகர் அமர்தராஜ் மற்றும் பொம்மிநாயக்கன்பட்டி ராம்குமார் என்பது உறுதியானது. ஆன்லைனில் மாத்திரைகளை வாங்கி லாபத்திற்காக விற்பனை செய்த அவர்களை போலீஸார் கைது செய்தனர்

தேனி வாசிகளே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது தேனி மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம் . தொடர்புக்கு 04546-254368 . SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.