Theni

News February 10, 2026

பணி நியமன புகாரில் டி.இ.ஓ ஆஜராக உத்தரவு

image

தேனி சி.இ.ஓ அலுவலகத்தில் இன்று (பிப்.10) தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நாகலட்சுமி அவரது நிர்வாக வரம்பில் உள்ள பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்கள் பற்றி நேரடி விசாரணை நடைபெற உள்ளது. விசாரணையில் நாகலட்சுமி, நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் ஆஜராக வேண்டும். டி.இ.ஓ. வாக பொறுப்பேற்ற 2024 அக்.10க்கு பின் கையாளப்பட்ட பணிநியமன கோப்புகளை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

News February 10, 2026

பைக் விபத்தில் காவலாளி படுகாயம்

image

தேவதானப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (59). இவர் தனியார் சர்க்கரை ஆலையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரக்கூடிய நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பியுள்ளார். அப்போது ஜெயமங்கலம் ஆற்றுப்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி பைக் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பிரகாஷ் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து ஜெயமங்கலம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு.

News February 10, 2026

தேனி: மாட்டு பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News February 10, 2026

தேனி: அரசு வழங்கும் ரூ.15 லட்சம் தனிநபர் கடன் APPLY…

image

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பாக தனிநபர் கடன் ரூ.15 லட்சம் வரை பெறலாம். பிற்படுத்தபட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 18 – 60 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டம் மூலம் கடன் பெறலாம். இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணபிக்கலாம். மேலும் தகவல்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவகத்தை அனுகவும். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 10, 2026

பெரியகுளம்: இளம்பெண் கழுத்து அறுத்துக் கொலை

image

தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கமாரி. கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ராஜா கத்தியால் தங்கமாரியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடினார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜாவை கைது செய்தனர்.

News February 10, 2026

தேனி: கஞ்சா வழக்கில் பெண் உள்பட 4 பேர் கைது

image

உத்தமபாளையம், கம்பம் பகுதிகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக SP-க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அப்போது உத்தபாளையம்-குமுளி பைபாஸ் சாலையில் ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், சாக்கு பைகளில் 21 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. கஞ்சா கடத்தல் தொடர்பாக வனிதா, அகில் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

News February 10, 2026

தேனி: 20.755 கிலோ கஞ்சா பறிமுதல்

image

தேனி மாவட்டம் உத்தமபாளையம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 4 நபர்களை கைது செய்தனர். இதனை தொடர்ந்து அந்த நபர்களிடமிருந்து மொத்தம் 20.755 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது என மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 10, 2026

தேனி: 20.755 கிலோ கஞ்சா பறிமுதல்

image

தேனி மாவட்டம் உத்தமபாளையம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 4 நபர்களை கைது செய்தனர். இதனை தொடர்ந்து அந்த நபர்களிடமிருந்து மொத்தம் 20.755 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது என மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 10, 2026

தேனி: 20.755 கிலோ கஞ்சா பறிமுதல்

image

தேனி மாவட்டம் உத்தமபாளையம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 4 நபர்களை கைது செய்தனர். இதனை தொடர்ந்து அந்த நபர்களிடமிருந்து மொத்தம் 20.755 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது என மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 10, 2026

தேனி: 20.755 கிலோ கஞ்சா பறிமுதல்

image

தேனி மாவட்டம் உத்தமபாளையம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 4 நபர்களை கைது செய்தனர். இதனை தொடர்ந்து அந்த நபர்களிடமிருந்து மொத்தம் 20.755 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது என மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!