India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 4 நபர்களை கைது செய்தனர். இதனை தொடர்ந்து அந்த நபர்களிடமிருந்து மொத்தம் 20.755 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது என மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று (09.02.2026) இரவு 10 மணி முதல் நாளை (10.02.2026) காலை 6 மணி வரை நடைபெறும் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. அவசர தேவையுள்ள பொதுமக்கள், தங்களது உட்கோட்டத்திற்குட்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அவரது மனைவியை அழைத்துக்கொண்டு திண்டுக்கல் தேனி பைபாஸ் சாலையில் நேற்று (பிப்.8) பைக்கில் சென்றுள்ளார். அப்பொழுது கருப்பையா என்பவர் ஓட்டி வந்த பைக் இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் சுரேஷ் மற்றும் அவரது மனைவி படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராம திலகம்(61). இவர் நேற்று (பிப்.08) கார்த்திகேயன் என்பவரது ஆட்டோவில் சின்னமனூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்விற்கு சென்றுள்ளார். ஆட்டோவை கார்த்திகேயன் அதிவேகமாக இயக்கிய நிலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராம திலகம் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு.

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு சார்பில் 2600 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது 1400 வீடுகள் காலியாக உள்ளது. வீடுகள் தேவைப்படுவோர் சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தேனி எஸ்.பி அலுவலகம் பின்புறம் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

ராஜப்பன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன். இவா் 2 தினம் முன்பு வீட்டை பூட்டிவிட்டு தேனியில் உள்ள மகள் வீட்டு விஷேசத்துக்கு குடும்பத்துடன் சென்றாா். நேற்று (பிப்.8) வீட்டுக்கு திரும்பச் சென்று பாா்த்த போது வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 4.5 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. திருட்டு குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.

தேனி மாவட்டத்தில் இன்று 8.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மக்களே; வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE

தேனி நகர் பகுதியில் நேற்று நாதக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் பேசிக் கொண்டிருந்த பொழுது அங்கு தமிழக வெற்றி கழகத்தினர் சிலர் இடையூறு செய்யும் விதமாக செயல்பட்டனர். இதனால் தவெக மற்றும் நாதக இடையே அப்பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து தேனி நகர் போலீசார் தவெக மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.