India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொடைக்கானல் ரோடு ரயில் நிலையம் மற்றும் தேனி ரயில் நிலையம் இடையிலான 45 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய ரயில்வே பாதை அமைத்திட ரயில்வே வாரிய தலைவர் ஜெயா வர்மா சின்ஹாவை தேனி எம்.பி தங்கதமிழ்ச்செல்வன் இன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தேனி மாவட்டத்தின் வணிகம் மற்றும் சுற்றுலா மேம்படும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்கள் குறித்த பயிற்சி தேனி எஸ்பி அலுவலகத்தில் மே 14 அன்று துவங்கியது. பயிற்சிக்காக விசாரணை அதிகாரிகள் உள்ளிட்ட 1829 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு தேனி சட்டக்கல்லூரி பேராசிரியர்கள் பயிற்சி அளித்தனர். இதுவரை 1590 பேர் பயிற்சியை நிறைவுசெய்துள்ள நிலையில் எஞ்சிய 239 பேர் பயிற்சி பெற உள்ளனர் என மாவட்ட காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தேனி வடக்கு, தெற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பாக வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.எம்.அப்துல்லாஹ் பத்ரி தலைமையில் நேற்று பங்களாமேட்டில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விரைந்து மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நடப்பு ஆண்டில் காரீப் பருவத்தில் நெல், மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை, எள், துவரை, பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரியின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு தேனி ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தினை KSHEMA GIC என்ற காப்பீடு நிறுவனம் செயல்படுத்துகிறது.
கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான வாட்டர் போலோ போட்டியில் பங்கேற்றவர்களில் தமிழக அணிக்கு 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் 1 மாணவியான ஜெமிமா கோல் கீப்பராக தேர்வாகி உள்ளார். இவர் இந்தூரில் ஜூலை 7 முதல் 11 வரை நடக்க உள்ள தேசிய வாட்டர் போலா விளையாட்டில் பங்கேற்க உள்ளார். தேசிய போட்டிக்கு தேர்வான மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நிதி உதவி திட்டத்திற்கு தகுதியான தேவாலயங்களில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தேனி ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் வாயிலாக பொதுமக்களிடம் இருந்து 317 கோரிக்கை அடங்கிய பல்வேறு மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா பெற்றுக்கொண்டார். இம்மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தேனியில் மாவட்ட அளவில் நடைபெற்ற கூடைப் பந்தாட்ட போட்டியில் பி.எஸ்.ஏ அணி முதல் பரிசை வென்றது. நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் பல்வேறு அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனையடுத்து, சாம்பியன் பட்டம் வென்ற பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியினருக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
தேனியை சேர்ந்தவர் முருகன். இவர் இந்து முன்னணியில் முக்கிய பிரமுகராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் முருகனை தேனி மாவட்ட தலைவராக அறிவித்துள்ளார். புதியதாக தேனி மாவட்ட தலைவராக பொறுப்பேற்கும் முருகனுக்கு மாவட்டத்தை சேர்ந்த இந்து முன்னணியின் நிர்வாகிகள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி மற்றும் பேச்சுப் போட்டி நடத்த வேண்டும் என தமிழ் வளர்ச்சி அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி தேனி மாவட்டத்தில் ஜூலை 9 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.