India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் தேனி நாடாா் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 2 தோ்வு மையங்களில் நேற்று (ஜூலை 21) இடைநிலை ஆசிரியா் பணிக்கான எழுத்து தோ்வு நடைபெற்றது. தோ்வு எழுதுவதற்கு மாவட்டத்தில் மொத்தம் 704 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 661 போ் தோ்வு எழுதினா். 43 போ் தோ்வு எழுத வரவில்லை. தோ்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா ஆய்வு செய்தாா்.
தமிழ்ச்செம்மல் விருது மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தேர்வுசெய்து வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூ.25,000, சான்றிதழ் வழங்கப்படும். தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணையளத்தில் பதிவிறக்கி, பூர்த்திசெய்து கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆக.12 கடைசி நாள் ஆகும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
போடிநாயக்கனூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று சார்பு நீதிமன்றத்தினை உயர்நீதிமன்ற நீதிபதி P.T. ஆஷா மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி A.A.நக்கீரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்கள். உடன் முதன்மை மாவட்ட நீதிபதி க.அறிவொளி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் ஆகியோர் உள்ளனர்.
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் இரவு 10 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேனி கிராண்ட்மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டு 56வது மாவட்ட அளவிலான செஸ் போட்டி தேனி தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. அதோடு மாநில செஸ் போட்டிகளில் வெற்றி பெற்று, தேசிய போட்டிகளுக்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு பாராட்டு விழாவும் இங்கு நடைபெற்றது. இதனை தேனி டிஎஸ்பி பார்த்தீபன் தொடங்கு வைத்து மாநில அளவில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை அதிகபட்சமாக 16.7 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கணவர் இல்லாத, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், முதிர் கன்னிகள், கிராம, நகர் புறத்தில் வாழும் ஆதரவற்ற பெண்கள் ஆகியோர் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து உறுப்பினர் ஆகலாம். இந்த இணையதளம் மூலம் ஒய்வூதியம், தற்காலிக தங்கும் இடம், திறன் வளர்ப்பு பயிற்சி, சுயதொழில் மானியம் போன்ற உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் கூறியுள்ளார்.
தேனி உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய கர்னல் ஜான் பென்னிகுக் முல்லை பெரியாறு அணையினைக் கட்டினார். அவரது மகன் வழிப்பேத்தி ஆல்பா மெக்கனெல்(88) அவர்கள் உடல்நிலை முதிர்வு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார்.
தேனி மாவட்டத்தில் நடப்பாண்டில் நெல் இதுவரை 3,621 ஹெக்டர் நிலப்பரப்பிலும், சிறுதானியங்கள் 135 ஹெக்டேரிலும், பயிறு வகைகள் 700 ஹெக்டேரிலும், எண்ணெய் வித்து பயிர்கள் 360 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் கரும்பு 18 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வீ. சஜீவனா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.