Theni

News March 14, 2026

தேனி: அதிமுகவில் இணைந்த OPS ஆதரவாளர்கள்

image

தேனி மாவட்டம், உப்பார்பட்டி பகுதியை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களை அந்த அணியில் இருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன் தலைமையில் தங்களை அதிமுகவில் உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர். இதில் தேனி மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கெளதம், உப்பார்பட்டி மேற்கு கிளைச் செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News March 14, 2026

தேனி அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு

image

தேனி அருகே தெற்கு ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜனுக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் மார்.12 அன்று ஈஸ்வரன் பைக்கில் சென்ற போது நாகராஜன் வழிமறித்து அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினார். காயமடைந்த ஈஸ்வரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி GH-ல் சேர்த்தனர். இதுகுறித்த புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து நாகராஜனை கைது செய்தனர்.

News March 14, 2026

தேனி: திருமணமான 5 நாளில் மணப்பெண் தற்கொலை!

image

கூடலூர் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டி சேர்ந்த சந்திரன் – காயத்ரி தம்பதியினர் மகள் ஜெயஸ்ரீ. இவருக்கும், காயத்ரியின் தம்பியான முத்தீஸ்வரன் என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மதியம் ஜெயஸ்ரீ தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூடலூர் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

News March 14, 2026

தேனி: திருமணமான 5 நாளில் மணப்பெண் தற்கொலை!

image

கூடலூர் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டி சேர்ந்த சந்திரன் – காயத்ரி தம்பதியினர் மகள் ஜெயஸ்ரீ. இவருக்கும், காயத்ரியின் தம்பியான முத்தீஸ்வரன் என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மதியம் ஜெயஸ்ரீ தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூடலூர் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

News March 14, 2026

தேனி: திருமணமான 5 நாளில் மணப்பெண் தற்கொலை!

image

கூடலூர் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டி சேர்ந்த சந்திரன் – காயத்ரி தம்பதியினர் மகள் ஜெயஸ்ரீ. இவருக்கும், காயத்ரியின் தம்பியான முத்தீஸ்வரன் என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மதியம் ஜெயஸ்ரீ தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூடலூர் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

News March 14, 2026

தேனி: திருமணமான 5 நாளில் மணப்பெண் தற்கொலை!

image

கூடலூர் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டி சேர்ந்த சந்திரன் – காயத்ரி தம்பதியினர் மகள் ஜெயஸ்ரீ. இவருக்கும், காயத்ரியின் தம்பியான முத்தீஸ்வரன் என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மதியம் ஜெயஸ்ரீ தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூடலூர் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

News March 14, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 13.03.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News March 13, 2026

தேனி: மனைவி உள்ளிட்ட இருவருக்கு இரட்டை ஆயுள்

image

போடி சுப்புராஜ் நகரை சேர்ந்தவர் ஹபிபுல்லா மனைவி அனீஸ் பாத்திமா. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபாண்டி என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதற்கு இடையூறாக இருந்த ஹபிபுல்லாவை 2019-ம் ஆண்டு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை இன்று முடிவடைந்த நிலையில் ஜெயபாண்டி, அனீஸ் பாத்திமா ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை நீதிபதி தீர்ப்பளித்தார்

News March 13, 2026

தேனி: துப்பாக்கிகளை ஒப்படைக்க போலீசார் அறிவுறுத்தல்

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் தங்களது துப்பாக்கிகளை அந்தந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு மாவட்ட காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம் பகுதிகளில் துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் துப்பாக்கியை உடனடியாக ஒப்படைக்க வேண்டு எனவும் தெரிவித்துள்ளனர்.

News March 13, 2026

தேனி: கேஸ் புக் செய்வதில் சிக்கலா.? புதிய எண்கள்

image

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, ​SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..

error: Content is protected !!