India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வருகின்ற செப்.19 அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி, போடி வட்ட சட்டப்பணி குழு தேசிய மக்கள் நீதிமன்றம் அனைத்து நீதிமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளதாக நீதித்துறை அறிவித்துள்ளது. அன்றைய நாள் பொதுமக்கள் நீதிமன்றத்தில் சென்று வழக்குகளுக்கு தீர்வு காணலாம்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம், போடி, சின்னமனூர், உத்தமபாளையம் பகுதியில் இருந்து சுமார் 341 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இதில் தையல் இயந்திரம், வீட்டுமனை பட்டா, கல்விக் கடன் உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்குமாறு மற்றும் பிரச்சனைகள் தொடர்பாக மனுக்களை வழங்கி உள்ளனர்.
தேனி முழுவதும் சுமார் 800-க்கு மேற்பட்ட இடங்களில் உரிய அனுமதி பெற்று சிலைகள் வைக்க உள்ளன. இந்த சிலைகளை கரைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மூலம் 9 இடங்களில் தேர்வு செய்துள்ளது. தேனியில் முல்லை பெரியாறு பெரியகுளத்தில் வராகநதி, ஆண்டிபட்டி வைகை, வருசநாடு மூல வைகை ஆறு மற்றும் தட்டுப்பனை, போடி கொட்டகுடி ஆறு, மார்க்கையன்கோட்டை ஆறு, பாளையம் ஆறு, சுருளிபட்டி ஆறு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அரசால் திருக்குறள் முற்றோதல் போட்டி நடத்தப்படவுள்ளது. விரும்புவோர் விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் கொடுக்கலாம். வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக அரசு பாரட்டு சான்றிதழ், ரூ.15 ஆயிரம் பரிசு வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு 91596 68240 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ் 1 படிக்கும் மாணவியை பெரியகுளம் அழகர்சாமி புரத்தை சேர்ந்த ஜெபி 22 பாலியல் வன்கொடுமை செய்தார் இதற்க்கு அவரது தாய் ஆதரவாக இருந்துள்ளார். மேலும் ஜெபி அவரது தாய் பாக்கியம் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த சிறுமியின் தாயாரை அவதுறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். போலீசார் மகன், தாய் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் தினமும் இரவில் போலீசார் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள், பாதுகாப்பு குறித்து இரவில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதில் பொதுமக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் காவல்துறையை அனுகுவதற்கு தினமும் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் அவர்களின் செல்போன் எண்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று(செப்.1)ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தேனி மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகளில் 1225 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. தற்போது வாக்காளர் சரிபார்ப்பு பணி வீடுகள் வாரியாக நடந்து வருகிறது. 1500 வாக்காளர்களுக்கு கூடுதலாக உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரிப்பதற்காக பணிகள் துவங்க உள்ளன. இதற்காக வரைவு ஓட்டுச்சாவடி பட்டியலை செப்.2-ல் கலெக்டர் ஷஜீவனா வெளியிடுகிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடபுதுப்பட்டியை சேர்ந்த ராணுவவீரர் மதன்கோபால். இவரது மனைவி சந்திரபிரபா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மதன்கோபால், அவரது தந்தை வீரதாஸ், தாய் முருகேஸ்வரி, சகோதரர் கிருஷ்ணன், பாட்டி நாகரத்தினம் ஆகியோர் கூடுதலாக வரதட்சிணை கேட்டு தன்னைக் கொடுமைப்படுத்துவதாக தேனி எஸ்.பி இடம் சந்திரபிரபா புகாரளித்தார். மதன்கோபால் உள்ளிட்ட 5 பேர் மீது நேற்று (ஆக.31) வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கம்பம் பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன் (31). இவர் 13 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணையில் சிறுமிக்கு, சதாம் உசேன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனை அடுத்து போலீசார் நேற்று (ஆக.30) சதாம் உசேன் மீது போக்ஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.