Thanjavur

News February 9, 2025

தஞ்சையில் உள்ள விடுமுறையையொட்டி மாநகராட்சி கூட்டம் ஒத்துழைப்பு

image

தஞ்சை மாநகராட்சி மாதாந்திர கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் மாநகராட்சி மாதாந்திர கூட்டம் நாளை மேயர் தலைமையில் நடைபெற இருந்த நிலையில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ள நிலையில் நாளை நடைபெற இருந்த மாநகராட்சி மாதாந்திர கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

News February 9, 2025

தஞ்சாவூர் தாலுகாவுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை

image

தஞ்சாவூர் தாலுகாவுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை. தஞ்சை அடுத்த புன்னைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திருக்குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு நாளை 10ஆம் தேதி அன்று தஞ்சாவூர் வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி உள்ளூர் விடுமுறை என‌ மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

News February 9, 2025

புதிய திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்ய சிறப்பு முகாம்

image

தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அவர்களின் சுய விவரங்களை “விவசாயிகள் பெறும் பதிவேடு” என்னும் புதிய திட்டத்தின் கீழ் பதிவு செய்ய இன்று முதல் கிராமங்கள் தோறும் ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள் தகுந்த ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 9, 2025

தஞ்சை: பொது இடங்களில் புகைபிடித்த 21 பேருக்கு அபராதம்

image

பொது இடங்களில் புகைபிடித்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே பொது இடங்களில் புகைபிடித்த 21 பேருக்கு தலா 100 ரூபாய் என ரூ.2,100-ஐ அதிகாரிகள் அபராதமாக விதித்து வசூல் செய்தனர். மேலும் பொது இடங்களில் புகைபிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

News February 9, 2025

கும்பகோணம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை

image

தாராசுரத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி ஆனந்தி (35). கடந்த சில நாட்களாக இவர் உடல் நலக்குறைவால் மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் முன் ஆனந்தி பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரயிலின் லோகோ பைலட் அளித்த தகவலின் பேரில் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றினர்.

News February 8, 2025

தஞ்சை அருகே ஆலக்குடியில் ரயில் நிறுத்தம்

image

மயிலாடுதுறை – செங்கோட்டை விரைவு ரயிலானது வரும் 10ம் தேதியிலிருந்து மே 10ம் தேதி வரை மூன்று மாதங்களுக்கு தஞ்சாவூர் அருகே ஆலக்குடி ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். செங்கோட்டை மார்க்கமாக செல்கையில் பிற்பகல் 1.26-க்கும், மயிலாடுதுறை மார்க்கமாக செல்கையில் பிற்பகல் 2.06-க்கும் நின்று செல்லும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News February 8, 2025

தஞ்சையில் நாய்கள் கண்காட்சி

image

தஞ்சாவூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில் தஞ்சாவூர் நாய்கள் கண்காட்சி மாதக்கோட்டை சாலை SPCA பசுமட வளாகத்தில் வரும் பிப்.09 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. பாரம்பரிய இனங்களை பாதுகாக்கவும், செல்லப் பிராணிகள் மீதான நமது ஈர்ப்பை அதிகப்படுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நாய்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 8, 2025

தஞ்சையில் இலவச அழகுக்கலை பயிற்சி

image

தஞ்சை ஈஸ்வரி நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு மையத்தில் 30 நாள் இலவச அழகு கலை பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தேநீர், மதிய உணவு மற்றும் பயிற்சிக்கான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.12 ஆம் தேதி கடைசி நாள் என கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் அங்கயற்கண்ணி தெரிவித்துள்ளார்.

News February 7, 2025

ஒரத்தநாட்டில் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே கூடலூர் பகுதியில் சேர்ந்த காளிமுத்தின் மகள் மகாலட்சுமி (18). இவர் தஞ்சை, ஒரத்தநாட்டில் உள்ள அரசு கலைக் அறிவியல் கல்லூரியில் பி சி ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அரசு மாணவிகள் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்த நிலையில் நேற்று காலை எலிமருந்து தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து ஒரத்தநாடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 7, 2025

திருவையாறு: மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு பாலியல் தொல்லை

image

தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கும் தஞ்சை கரந்தையை சேர்ந்த சண்முகராஜ் (வயது 42), இவர் திருவையாறு அருகே உள்ள கிராமம் ஒன்றில் நிதி வசூலிப்பதற்காக சென்ற போது, வீட்டில் தனியாக இருந்த 19 வயது மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகாரளிக்கவே, போலீசார் சண்முகராஜை கைது செய்தனர்.

error: Content is protected !!