India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.6) இரவு 10 முதல், நாளை (ஏப்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சை மக்களே வரும் சட்டமன்ற தேர்தலில் உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?. <

தஞ்சை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தஞ்சை மாவட்ட மக்கள் 04362-227100 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தஞ்சை மாவட்ட மக்கள் 04362-227100 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

தஞ்சை மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

தஞ்சை மாநகராட்சி மேயராக சண்.இராமநாதன் இருந்து வருகிறார். இந்நிலையில் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக சண்.இராமநாதன் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ள காரணத்தால், இன்று மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனரிடம் தனது மேயர் பதிவியை ராஜினாமா செய்து கடிதத்தை வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் 19 மிமீ, வல்லம் 45 மிமீ, திருவையாறு 31 மிமீ, பூதலூர் 50.20 மிமீ, ஒரத்தநாடு 54 மிமீ, வெட்டிக்காடு 43.60 மிமீ, பாபநாசம் 29 மிமீ, அய்யம்பேட்டை 38 மிமீ, பேராவூரணி 63.20 மிமீ, மதுக்கூர் 24.60 மிமீ, திருக்காட்டுப்பள்ளி 18.60 மிமீ, நெய்வாசல் தெபாதி 12 மிமீ என மாவட்டம் முழுவதும் சராசரியாக 507.50 மிமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து, கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு தேர்தல் வெற்றிக்கான வியூகங்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களின் பணிகள் குறித்து ஆலோசித்தனர். இக்கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து, கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு தேர்தல் வெற்றிக்கான வியூகங்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களின் பணிகள் குறித்து ஆலோசித்தனர். இக்கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.