Thanjavur

News January 9, 2025

ஜனவரி 12ம் தேதி டாஸ்மாக் கடைகளை முட கோரிக்கை

image

சுவாமி விவேகானந்தரின் 162 வது ஜெயந்தி விழா வருகின்ற ஜனவரி 12ம் தேதி நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட உள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் பெருமை எடுத்துரைத்த பன்முகத்தன்மை கொண்ட மகான் சுவாமி விவேகானந்தரின் ஜெயந்தி விழா அன்று இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் அன்று ஒரு நாள் மதுக்கடைக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசை வலியுறுத்தி சார் ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா கோரிக்கை

News January 9, 2025

கூட்டுறவு நிறுவன பணியாளர்களின் குறைதீர்க்கும் கூட்டம்

image

கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் குறைகள் தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையான நாளை (ஜன.10) காலை 11.00 மணிக்கு தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் பணியாளர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.எனவே, நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் தங்களது பணி தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

News January 9, 2025

தஞ்சை தொழில் முனைவர் திட்டத்தின் கீழ் வங்கி கடன்

image

முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் (CM-ARISE) திட்டத்தின் கீழ் திட்ட மதிப்புத்தொகையில் 35% அல்லது ரூ. 3.50 லட்சம் இவற்றில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுடன் வழங்கப்படும் எனவும், இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News January 8, 2025

தஞ்சை மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நாளை முதல் 9, 10, 11, ஆகிய தேதிகளில் மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் வரும் ஜனவரி 11ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

News January 8, 2025

தஞ்சை மாநகராட்சி சிட்டி 2.0 ஆய்வுக்கூட்டம்

image

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் தஞ்சை மாநகர மேயர் சன் ராமநாதன் தலைமையில் இன்று (ஜன.08) சிட்டி 2.0 பற்றி மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடைபெற்றது. இதில் தஞ்சை மாநகராட்சியின் மேற்கொள்ளப்பட இருக்கும் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றன. இதில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News January 8, 2025

வேலை வாய்ப்பு மையத்தில் பயிற்சி வகுப்பை தொடக்கம்

image

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்IV தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் இன்று (ஜன.08) துவக்கி வைத்தார்கள். இந்த நிகழ்வின்போது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உதவி இயக்குநர் கா.பரமேஸ்வரி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

News January 8, 2025

தஞ்சை பொங்கல் பரிசு தொகுப்பு ஆட்சியர் அறிவிப்பு

image

பொங்கல் பண்டிகையையொட்டி, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு நீள கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்கப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும், பொங்கல் பண்டிகையொட்டி, பரிசு தொகுப்பினை நாளை (ஜன.9) ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News January 8, 2025

தஞ்சையில் குரூப் தேர்வுகளுக்கு பயிற்சி அறிவிப்பு

image

தஞ்சையில் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் தாட்கோ முன்னனி பயிற்சி நிறுவனம் மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு பயிற்சியினை வழங்கவுள்ளது. இதில் பங்கேற்க <>www.tahdco.com <<>>என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE NOW!

News January 6, 2025

தஞ்சாவூர்: தூய்மைப் பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

image

தஞ்சாவூர் மாநகராட்சி, ஒப்பந்த தூய்மைப் பணியாளர் மற்றும் ஓட்டுநர் சங்கம் சார்பில், திங்கள்கிழமை காலை மாநகராட்சி முன்பு, ஊதியம் வழங்காதது, சீருடை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆனந்தராஜ், செயலாளர்கள் உஷா, முனியம்மாள் முன்னிலை வகித்தனர்.

News January 6, 2025

நவக்கொல்லை அருகே ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம்

image

நல்லமான்புஞ்சை பகுதியை சேர்ந்தவர் தயாநிதி (29). இவருக்கு திருமணம் ஆகி ஓராண்டுகள் ஆன நிலையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, வீட்டை விட்டு நேற்று வெளியேறிய நிலையில் இன்று நவக்கொல்லை பிடாரியம்மன் கோவில் அருகே உள்ள தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் அவர் உடலை மீட்டு திருச்சிற்றம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!