India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குண்டாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் பல தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
▶️முதல்வன்
▶️ஸ்ரீ பண்ணாரி அம்மன்
▶️தாஸ்
▶️வருஷமெல்லாம் வசந்தம்
▶️வேலை கிடைச்சுடுச்சு
▶️அண்ணன் காட்டிய வழி
▶️ஓ மானே மானே
▶️செவத்தப் பொண்ணு
▶️பூமணி
▶️ராஜ ராஜேஸ்வரி
லிஸ்டில் வராத உங்களுக்கு தெரிந்த படங்களை கமெண்ட் செய்து , நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(30). இவருடைய மனைவி சீதாலட்சுமி (29). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் சீதாலட்சுமிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. கணவருக்கும் சரிவர வேலை இல்லாத நிலையில் தனக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அறிந்து மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழக அரசின் புதிய திட்டமான, தமிழக பேருந்துகளில், யு.பி.ஐ (UPI) மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி பயணச் சீட்டு பெற்றுக் கொள்ளும் முறை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்திலும், தென்காசி, சங்கரன்கோவில் டிப்போவில் இருந்து வரும் பேருந்துகளில் UPI மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2025-2026ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விடுதிகளில் மாணவ / மாணவியர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இவ்விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. கடைசி நாள்:மே.5 மாலை 5 மணி ஆகும். தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகிரி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தலைமை காவலர் சுந்தர்ராஜ் மற்றும் இளையராஜா ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ராயகிரி அருகே TN 79 E 3274 என்ற எண் கொண்ட Tata Ace வாகனத்தில் 1300 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது. வாகனத்தை ஓட்டி வந்த துரைசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவர் மகன் கிருஷ்ணசாமி என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்ட திட்ட அலுவலரின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு நேரடியாக நியமனம் செய்யப்பட இருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்.23) கடைசி நாள். <
தென்காசியில் இருந்து பண்பொழி போகும் ரோட்டில் தென்படுவது இந்த குத்துக்கல்தான். 30 அடி உயரம் கொண்ட இந்த கல்லை அடையாளமாக வைக்கப்பட்ட பிறகு இங்குள்ள கிராமத்திற்கு குத்துக்கல்வலசை கிராமம் என்ற பெயர் வந்தது. இப்பகுதியில், வலசை என்ற வார்த்தையில் முடியும் பல கிராமங்கள் இருந்தாலும், இந்த குத்துக்கல் வலசை பிரபலம். வலசை என்பதற்கு, வரிசை, பகுதி என்று அர்த்தமாகும். உங்க கருத்தை பதிவிட்டு Share பண்ணுங்க.
தென்காசி அலகு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் ஏப்ரல் 26. காலை 11.00 மணிக்கு தொடங்கி மாலை 5.00 மணி வரை ஏலம் நடத்தப்பட உள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 23.04.2025 முதல் 25.04.2025 வரையிலான நாட்களில் தென்காசி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை சார்பு ஆய்வாளர் கட்டுப்பாட்டின் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிடலாம்
தென்காசியில் விடுமுறையை கழிக்க சிறந்த சுற்றுலாத்தலங்கள்
▶அகஸ்தியர் நீர்வீழ்ச்சி
▶குற்றாலம் அருவிகள்
▶காசி விஸ்வநாதர் கோயில்
▶தென்காசி முருகன் கோயில்
▶ஐந்தருவி நீர்வீழ்ச்சி
▶சித்ர சபை
▶குதிரையார் அணை
▶தென்காசி கோட்டை
தென்காசியில் உள்ள இந்த இடங்களுக்கு செல்ல விரும்பும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
தென்காசி மாவட்டத்தில் திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கி மூலம் உடனடி லோன் மேளா அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு திட்டம் சார்ந்த கடன் மற்றும் விவசாயம் சார்ந்த லோன் மேளா சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டு உடனடியாக கடன் வழங்கப்படும். தென்காசியில் வருகின்ற (28-4-2025) அன்று குத்துக்கல் வலசை S.R மஹாலில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. பணம் தேவைபடுவோருக்கு SHARE செய்து உதவவும்.
Sorry, no posts matched your criteria.