Tenkasi

News August 17, 2025

குற்றாலம் செல்வோர் கவனத்திற்கு!

image

பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் வனத்துறை அறிவித்துள்ள நேர கட்டுப்பாட்டை மீறி சுற்றுலா பயணிகள் செல்லாத வகையில் இரும்பு கம்பியிலான டோல் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரும்பு கேட் அமைத்த வனத்துறையினர். மாலை 6 மணிக்கு மேல் பழைய குற்றால அருவிக்கு யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் தகவல். *ஷேர் பண்ணுங்க

News August 17, 2025

வாசுதேவநல்லூர் பகுதிகளில் ஆகஸ்ட்.19 மின்தடை

image

வாசுதேவநல்லூர் பகுதிகளில் ஆகஸ்ட் 19ம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2 மணி வரைதரணி நகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல் கட்டும் சேவல், சுப்ரமணியபுரம், உள்ளார், வெள்ளானை கோட்டை, மலையடிக்குறிச்சி மற்றும் தாருகாபுரம் பகுதிகளில் மின்தடை பணிகள் முடிந்த பின்பு சீரான மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 17, 2025

தென்காசி: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

image

குடும்ப வன்முறை எதிர்கொள்ளும் தென்காசி மாவட்ட பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு. குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க அரசு பல சேவைகளை வழங்குகிறது. நீங்கள் ஏதாவது வன்முறையை எதிர்கொண்டால், உடனடியாக மாவட்ட குடும்ப வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு அலுவலர் 9787335500 என்ற எண்ணில் அழைத்து புகார் அளிக்கலாம். இது உங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். SHARE பண்ணுங்க!

News August 17, 2025

தென்காசி: ஆதார் மையங்களை தெரிஞ்சுக்க ISROவின் புதிய வழி!

image

தென்காசி மக்களே! ஆதார் புதுப்பிக்க, பெயர் மற்றும் முகவரி மாற்றம் எங்க போகணும் என்று தெரிஞ்சுக்க. ISRO அறிமுக செய்துள்ள <>Bhuvan Aadhaar<<>> இணையதளத்தில் தென்காசி மாவட்டம் செலக்ட் பண்ணீங்கன்னா, உங்கள் பகுதி அருகிலுள்ள ஆதார் சென்டர் முகவரி, தொடர்பு எண், எவ்வளவு தூரம் அப்படின்னு MAP மூலம் தெரிஞ்சுக்கலாம். இனி நீங்க ஆதார் மையம் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை… இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க..!

News August 17, 2025

தென்காசி: திரைப்படங்களின் காதலி – குற்றால அருவி!

image

தென்காசி மக்களே! நம் குற்றால அருவிகள் சுற்றுலா பயணிகளை மட்டுமல்ல சினிமா இயக்குனர்களையும் கவர்ந்துள்ளது.
⏩ஒரு வீடு இரு வாசல்
⏩பூவா தலையா
⏩பாசமுள்ள பாண்டியரே
⏩சிவா
⏩சிலப்பதிகாரம்
⏩வீராப்பு
⏩கோலங்கள்
⏩கண்ணும் கண்ணும்
⏩அரவான்
⏩வேட்டை
⏩பண்ணையாரும் பத்மினியும்
⏩தர்மதுரை போன்ற படங்கள் எடுக்கபட்டுள்ளது.
வேறு படங்கள் இருந்தா COMMENT பண்ணுங்க… SHARE பண்ணுங்க…!

News August 17, 2025

தென்காசி பொது தொகுதியாக மாற்றக்கோரிய மனு தள்ளுபடி

image

தென்காசி நாடாளுமன்ற மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிகளை பொது தொகுதிகளாக மாற்றக்கோரி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் ஜி.அருள்முருகன், இந்த விவகாரம் ஐகோர்ட்டின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்றும், இந்திய தேர்தல் ஆணையமே தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மனுதாரர் சட்டப்படி தீர்வு நாடலாம் எனவும் தெரிவித்தனர்.

News August 16, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

News August 16, 2025

தென்காசியில் நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமியர் ஊர்வலம்

image

தென்காசி பாரதிய ஜனதா கட்சி சார்பில் காசி விஸ்வநாதர் கோவில் முன்பு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராதை கிருஷ்ணர் முருகன் சிவன் கருப்பண்ண சுவாமி உள்ளிட்ட பல்வேறு வேடம் அணிந்து வந்த நூற்றுக்கு மேற்பட்ட சின்னஞ்சிறு மழலை குழந்தைகள் பெற்றோர்களுடன் ரதவீதிகளில் ஊர்வலமாக சென்று கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடினர்.

News August 16, 2025

குற்றாலம் அருவியில் மீண்டும் குளிக்க தடை

image

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக வனப்பகுதியில் கன மழை நீடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அவ்வப்போது நீரின் தாக்கம் குறைவதால் அறிவியலில் சுற்றுலா பின்னணி குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் குற்றால பிரதான அருவிகளில் தற்பொழுது மீண்டும் நீர்வரத்து அதிகரித்துக் கொட்டி வருவதை தொடர்ந்து 16ம் தேதி இரவு 7 மணி முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

News August 16, 2025

தென்காசி: கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற எளிய வழி!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <>க்ளிக் <<>>செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனிபட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்…
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!