India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சங்கரன்கோவில் ரயில் பயணிகளின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வார இறுதியில் பெங்களூரு, சங்கரன்கோவில் வழியாக செல்லும் ஹூப்ளி – கொல்லம் சிறப்பு இரயில் இயக்கப்படும். ஹூப்ளி – கொல்லம், 26-10-2024 சனி, கொல்லம் – ஹூப்ளி, 27-10-2024 ஞாயிறு அன்று இயங்கும். இந்த இரயில் வழித்தடமாக பெங்களூர், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி முன்பதிவு தொடங்கிவிட்டது
தென்காசி மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள், கட்டிடங்கள் கட்டு பணிகளும் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பாட்டா குறிச்சி பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைய உள்ளது. அந்த நிலத்தை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் இன்று(அக்.23) பார்வையிட்டார்.
பாஜக தமிழக நலத்திட்டங்கள் பிரிவு மாநில செயலாளர் மருது பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரம்-நெல்லைக்கு தீபாவளி சிறப்பு ரயில் திமுக MP ராணி ஸ்ரீ குமார்தான் பெற்றுக் கொடுத்தாக செய்திகள் வந்தன. அக்.,21 கடிதம் கொடுத்து அக்.,22 வெளியிட சாத்தியக்கூறுகள் கிடையாது. சிறப்பு ரயிலுக்கு கடிதம் கொடுத்ததை வரவேற்கிறோம். மக்களை ஏமாற்றும் செய்தி பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தின் நேற்று(அக்.22) பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக கடையம் அருகே உள்ள ராமநதி அணையில் 30 மில்லி மீட்டர் மழை, கடனாநதி அணையில் 4 மில்லி மீட்டர், கருப்பாநதி அணையில் 9 மில்லி மீட்டர், குண்டார் அணையில் 22 மில்லி மீட்டர், அடவிநயினார் அணையில் 2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக இன்று(அக்.23) மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை – செங்கோட்டை இடையே முற்றிலும் குளிரூட்டப்பட்ட சிறப்பு விரைவு ரயிலை தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 30-ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த விரைவு ரயில், திருவள்ளுவர், காட்பாடி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி வழியாக மறுநாள் காலை செங்கோட்டையை வந்தடைகிறது. இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்க உள்ளது.
தென்காசி தெற்கு மாவட்டம் சொக்கம்பட்டியில் ஆரம்பம் சுகாதார நிலையங்கள் திறப்பு விழாவிற்காக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(அக்.,23) வருகை தந்தார். அவரை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆகியோர் வரவேற்றனர்.
தென்காசி மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கின்றனர். எனவே அனைத்து வட்டார விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று கேட்டுக்கொண்டார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று (அக்.22) வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடையநல்லூர் அரசினர் தொலைபேசி நிலையத்தில் 2024ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் விருப்பம் உள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 30ஆம் தேதிக்கு விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்றன. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு பிரிவில் பெரிய குண்டு எரிதல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் 75 ஆயிரம் ரூபாய், பவித்ரா குண்டு எரிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று 50,000 ரொக்க பரிசம் வென்றார். அவர்களை இன்று (அக்.22) மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேரில் அழைத்து பாராட்டினார்.
தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம், கடையநல்லூர் இக்பால் நகரில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம், நாடார் பட்டி, ராமநாதபுரம் சுப்பிரமணியபுரம் ஓடை மறிச்சான் ஆகிய 4 பகுதிகளில் தலா ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையங்களை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நாளை (அக்.23) திறந்து வைக்க உள்ளார்.
Sorry, no posts matched your criteria.