Tenkasi

News February 4, 2026

தென்காசி இத செய்தால் பட்டா பெயர் மாற்றம் ஈஸி…!

image

தென்காசி மக்களே, தமிழக அரசு ஜனவரி 2, 2026 முதல் பத்திரப்பதிவு விதிகளின் கீழ், சொத்து வைத்திருப்பவர் பெயரில் பட்டா வைத்திருப்பதை கட்டாயமாக்கியுள்ளது. வட்டாசியர் அலுவலகம் செல்லாமல் எந்நேரமும் பட்டா திட்டம் மூலம் பெயர் மாற்றும் வசதி உள்ளது. இங்கு <>க்ளிக் <<>>செய்து (சர்வே எண் மற்றும் சப் டிவிஷன், பத்திரம்) மூலம் விண்ணப்பியுங்க.. இந்த திட்டம் மூலம் 15 நாட்களில் பெயர் மாறி விடும். Share பண்ணுங்க.

News February 4, 2026

தென்காசி : பருப்பு, எண்ணெய் இல்லையா COMPLAINT பண்ணுங்க..!

image

தென்காசி மக்களே, இந்த மாசம் ரேஷன் கடை – ல பருப்பு, எண்ணெய் இல்லைன்னு சொல்றாங்களா? இதை கண்டுபிடிக்க வழி இருக்கு. இங்கு <>கிளிக் <<>>செய்து தமிழக அரசின் ரேஷன் அட்டை செயலியை பதிவிறக்கம் செய்யுங்க. அதில் இந்த மாதம் பருப்பு , எண்ணை இருக்கான்னு தெரிஞ்சுடும். இதுல இருந்தும் கொடுக்கலையா 8939922990 (அ) 9773904050 எண்ணில் PDS <இடைவெளி> 107 மெசேஜ் மூலம் புகாரளியுங்க. இந்த பயனுள்ள தகவலை
SHARE பண்ணுங்க.

News February 4, 2026

தென்காசி: பாலியல் வழக்கில் பள்ளி தாளாளர் கைது

image

தென்காசி, பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியின் தாளாளர் செல்வசௌந்தர பாண்டியன் மீது, பாலியல் புகார் தெரிவித்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்தை சிறுமியின் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பாவூர்சத்திரம் போலீசார் பள்ளி நிர்வாகியை கைது செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்.

News February 4, 2026

தென்காசி மாவட்டத்தில் 499 பேர் கைது!

image

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி அங்ஙன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 488 பெண்கள் உட்பட 499 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

News February 3, 2026

தென்காசி மாவட்ட வட்டாச்சியர் எண்கள்!

image

1. திருவேங்கடம் – 04636-264400
2. சங்கரன்கோவில் – 04636-222270
3. சிவகிரி – 04636-250223
4. ஆலங்குளம் – 04633-270899
5. வீரகேரளம்புதூர் – 04633-277140
6. கடையநல்லூர் – 04633-245666
7. செங்கோட்டை – 04633-233276
8. தென்காசி – 04633-222262
(ஏதேனும் சந்தேகங்களுக்கு அழைத்தால் அலுவலக நேரத்தில் அழைக்கவும்) இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News February 3, 2026

தென்காசி: இனி அடிக்கடி EB ஆபீஸ் அலைய வேண்டாம்!

image

தென்காசி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <>கிளிக்<<>> செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். (அ) 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News February 3, 2026

தென்காசி: உங்க போனில் இந்த முக்கிய எண்கள் இருக்கா?

image

மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500
ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இதனை ஷேர் பண்ணுங்க!

News February 3, 2026

தென்காசி இனி சிலிண்டருக்கு காசு அதிகம் தராதீங்க..!

image

தென்காசி மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.
Indane: 75888 88824
HP Gas: 92222 01122
Bharat Gas: 1800 22 4344
இந்த எண்களில் Gpay,Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News February 3, 2026

தென்காசி : இனி டாக்டர் பீஸ் FREE..!

image

தென்காசி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை இங்கு <>கிளிக்<<>> செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகள் வழங்கி முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். வீட்டில் இருந்தே தீர்வு. அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News February 3, 2026

தென்காசியில் 2 உயிர்களை வேட்டையாடிய இருவர் கைது!

image

தென்காசி, செங்கோட்டை அருகே புளியரை வனப்பகுதியில் மான் வேட்டையாடி சமைத்துச் சாப்பிட்ட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். ரகசியத் தகவலின் பேரில் அங்கு சென்ற அதிகாரிகள், கோபாலகிருஷ்ணன் மற்றும் முருகன் ஆகியோரைப் பிடித்தனர். தப்பியோடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. வனவிலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி கடும் குற்றம் என வனத்துறை எச்சரிக்கை.

error: Content is protected !!