India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டம், முழுவதும் இணைய வழியில் உணவு வினியோகம் உள்ளிட்ட சேவை பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா Gig தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கான சிறப்பு முகாம் தற்சமயம் முதல் ஜீன் 14ம் தேதி வரை தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. எனவே முகாமிற்கு வருகை தந்து உறுப்பினர்கள் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இன்று அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலை புளியால் சந்திப்பில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேர் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற டெம்போ வேன் சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், 20 பேர் காயமடைந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் புறவழி சாலைகளில் மின்விளக்கு இல்லாததால் தொடர் விபத்து ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் சார்பில் கூறியுள்ளதாவது, “எலிபேஸ்ட் 3 % மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த அங்கீகாரம் பெறாத பூச்சிக்கொல்லி மருந்துகளை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இனிவரும் காலங்களில் ஏதேனும் விற்பனை நிலையங்களில் எலி பேஸ்ட் மருந்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று (மே.24) மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காவலர் குடியிருப்பு அருகே நேற்று(மே 23) மழைக்கு ஒதுங்கிய 15 பேர் மீது கட்டடம் இடிந்து விழுந்தது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் கூலி தொழிலாளிகள் மற்றும் பெண் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் மே மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயில் விநியோகிக்கப்படவில்லை. இவை எப்போது வரும் எனத் தெரியாமல் குடும்ப அட்டைதாரா்கள் தினமும் நியாயவிலைக் கடைகளுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனா். சில இடங்களில் கடை ஊழியர்களிடம் வாக்குவாதமும் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியில் ஜல்லிக்கட்டு, கல்லல் அருகே உள்ள நாவல்கனியான்மடம் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கி உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட் டது.இந்த ஊா்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளை நடத்துவதற்கான அனுமதியை அரசிதழில் வெளியிடுவதற்கான நடவடிக்கையை ஆட்சியா் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.
சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணிக்கென நியமிக்கப்பட்டுள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு சீரற்ற மயமாக்கல் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அஜித் முன்னிலையில் இன்று நடைபெற்றது. உடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜான்சன், தேர்தல் வட்டாட்சியர் மேசியாதாஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.
மானாமதுரையில் கடந்த மே.20 ஆம் தேதி இந்தியன் வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் மானாமதுரை துணை கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையினர் மானாமதுரை மேட்டு தெருவை சேர்ந்த பிரசாந்த்(31) என்பவரை இன்று கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.