India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பக்ரீத் பண்டிகை, உலகமெங்கும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சிவகங்கை நகரில் உள்ள வாலாஜா நவாப் பள்ளிவாசல் ஈத்கா மைதானத்தில் இன்று ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
சிவகங்கை அருகே உள்ள எம்பிடிசி செட் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிவகங்கை நகர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவரிடம் இருந்த 5 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நேற்று விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானத்திற்கு உட்பட்ட பெரியநாயகி சமேத செரணமூர்த்தீஸ்வரர் கோவில் ஆணி தேரோட்ட திருவிழா ஜூன்-16 ஆம் தேதி காப்புக்கட்டுடன் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது இன்று நான்காம் திருநாளை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை செய்து திருவீதி உலா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட்., கும்பகோணம் மற்றும் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) இணைந்து நடத்தும் ஒரு வருட தொழிற்பயிற்சிக்கு , தகுதியுடைய மாணவர்கள் வரும் ஜூலை.8ஆம் தேதிக்குள் www.boat-srp.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் மண்வளத்தை அதிகரிக்க கோடை காலத்தில், விவசாய பெருமக்கள் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டால், பருவ காலத்தில் சாகுபடி செய்யக்கூடிய பயிர்களில் அதிக விளைச்சலைப் பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், பாகனேரி புல்வநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில் பெரிய மாடுப் பிரிவில் 15 ஜோடி மாடுகளும், சிறிய மாடு பிரிவில் 29 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. இந்தப் போட்டியில், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மாடுகளும் சாரதிகளும் பங்கேற்றனா்.
சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சரின் ”மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம்” மாநில திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், மொத்தம் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் புதிய இனங்களில் மானியம் வழங்கப்படவுள்ளது. எனவே, விவசாயிகள் உழவர் செயலியில் பதிவு செய்து, பயன்பெறுவதற்கு தங்களது பகுதிகளுக்குட்பட்ட வேளாண் துறை அலுவலர்களை அணுகி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சரின் ”மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்”
மாநில திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், மொத்தம் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் புதிய இனங்களில் மானியம் வழங்கப்படவுள்ளது எனவே, விவசாயிகள் உழவர் செயலியில் பதிவு செய்து, பயன்பெறுவதற்கு தங்களது பகுதிகளுக்குட்பட்ட வேளாண் துறை அலுவலர்களை அணுகி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு அறிவிப்பு ஜூன் 7 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு சிவகங்கை மாவட்டத்தில் திருமணமாகாத ஆண் மற்றும் பெண் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலம்
ஜூலை 8 முதல் ஜூலை 28 வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு, 18.10.2024 முதல் ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்
விருதுநகரைச் சேர்ந்த கோபால் (29) என்பவர் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து இவரை கடந்த மாதம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலைக்கு மாற்றி உள்ளனர். இந்தநிலையில், சிறையில் இருந்த கோபால் நேற்று தப்பி ஓடியுள்ளார். தப்பியோடிய கோபாலை போலீசார் இன்று (ஜூன் 14) கண்டுபிடித்து கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.