Sivagangai

News June 26, 2024

உலக மக்கள் தொகை தினம்: விழிப்புணர்வு பிரசாரம்

image

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, சிவகங்கை முழுவதும் ஜூன் 27 முதல் ஜூலை 24ஆம் தேதி வரை விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறவுள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஒவ்வொரு தம்பதியரின் பெருமை குடும்ப நலம், அதுவே வளர்ந்த இந்தியாவின் புதிய அடையாளம் என்பது இந்த ஆண்டின் உலக மக்கள் தொகை தினத்தின் முழக்கமாகவும், தாய்,சேய் நல்வாழ்வுக்கு சரியான வயதில் திருமணமும், போதிய பிறப்பு இடைவெளியும் சிறந்தது என்றார்.

News June 26, 2024

அரசு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கிய ஆட்சியர்

image

தமிழக முதல்வரின் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், திருப்பத்தூர் வட்டத்திற்குப்பட்ட ஆர்கே மஹாலில் அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்களுடன், வட்ட அளவில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளவுள்ள பணிகள் குறித்து கலந்தாய்வு மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

News June 26, 2024

சிவகங்கை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் 2023 – 24ஆம் ஆண்டிற்கான, மணிமேகலை விருதுக்கு தகுதியுள்ள சமுதாய அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், கூடுதல் விபரங்களுக்கு திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம், சிவகங்கை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04575-240962 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா தெரிவித்துள்ளார்.

News June 25, 2024

சிவகங்கை மாவட்ட இசைப்பள்ளியில் சேர்க்கை

image

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் சிவகங்கையில் இயங்கி வரும் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2024-2025-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது. இதில், குரலிசை, பரதநாட்டியம், தவில், நாதசுரம், தேவாரம், மிருதங்கம், வயலின் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.350 மட்டுமே. மேலும், தகவலுக்கு 9443930540 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 25, 2024

சிவகங்கை எம்.பி.யாக கார்த்தி சிதம்பரம் பதவியேற்பு

image

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கார்த்திக் சிதம்பரம் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு 2வது முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.

News June 25, 2024

சிவகங்கை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாளை(ஜூன்.26) திருப்பத்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் நடைபெற உள்ளது. மேலும், அன்றைய தினம் மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை பொதுமக்கள், துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் திருப்பத்தூர் வட்டம் திருத்தலிநாதர் கோவில் அருகில் அமைந்துள்ள ஆர்.கே.மஹாலில் நடைபெற உள்ளதாக ஆட்சியர் ஆஷா அஜித் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News June 25, 2024

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் 

image

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 28.06.2024 வெள்ளிக்கிழமை அன்று 10.00 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News June 25, 2024

சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு திருவுருவ சிலை

image

சிவகங்கை மாவட்டத்தில் மருது சகோதரர்களுக்கு திருவுரு சிலை ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் சிவகங்கை சீமையை ஆட்சி புரிந்தவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர்கள் அவர்களை போற்றும் வகையில் இந்த திருவுருவச் சிலை அமைக்கப்படுகிறது என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை சார்பில் மானிய கோரிக்கையில் நேற்று (ஜூன்.24) அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 23, 2024

சிவகங்கை ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதிக்கு நிலையான பேருந்து நிலையம் அமைக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தீரன் திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று (ஜூன் 22) நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் கோரிக்கை குறித்து சிவகங்கை ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

News June 22, 2024

சிவகங்கை ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதிக்கு நிலையான பேருந்து நிலையம் அமைக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தீரன் திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று (ஜூன் 22) நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் கோரிக்கை குறித்து சிவகங்கை ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

error: Content is protected !!