Sivagangai

News June 30, 2024

சிவகங்கை மாவட்டத்திற்கு மழை…!

image

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் 30) மற்றும் நாளை (ஜூலை 1) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சிவகங்கை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும்.

News June 29, 2024

சமூக நலத்துறையில் பணி

image

சிவகங்கை மாவட்ட பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளராக பணிபுரிய விண்ணப்பம் வரவேற்பதாக மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி அறிவித்துள்ளார். இதற்கு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் சுழற்சி முறையில் தங்கி பணிபுரிபவராக இருத்தல் வேண்டும். இதுகுறித்து மேலும் தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் விண்ணப்பிக்க ஜூலை 3ஆம் தேதி இறுதி நாளாகும்.

News June 29, 2024

ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவுள்ளதாக தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யபடவுள்ளது. இதன்படி, மல்லல் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஒரு இயற்பியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்

News June 28, 2024

போலி விசா: சிவகங்கை எஸ்.பி எச்சரிக்கை

image

சிவகங்கையில் இருந்து போலி விசா மூலம் வெளிநாடு சென்று வேலை கிடைக்காமலும், தங்க இடமின்றி பாஸ்போர்ட்டை பறி கொடுத்து, திரும்ப முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். இந்நிலையில், வெளிநாடு அனுப்பும் ஏஜென்டுகள் அரசிடம் பதிவு செய்துள்ளாரா என்பது குறித்து <>https://www.emigrate.gov.in/#/emigrate<<>> இணையதளத்தில் பார்த்து உறுதி செய்யலாம் என எஸ்.பி அலுவலகம் தெரிவித்துள்ளது.

News June 28, 2024

ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவுள்ளதாக தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யபடவுள்ளது. இதன்படி, மல்லல் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஒரு இயற்பியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்

News June 28, 2024

தீவிர விழிப்புணர்வு முகாம்: ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் தீவிர விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது. முகாமில் 2 ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகள் மற்றும் 14 துத்தநாக மாத்திரைகள் அங்கன்வாடி மையம், துணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் (ம) அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வருகின்ற ஜுலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

News June 28, 2024

சிவகங்கை: ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கூறியதாவது; ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வழிகாட்டுதல் நெறிமுறைகள் www.sciencecitychennai.in என்ற அறிவியல் நகர வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட ஊரக பகுதிகளைச் சேர்ந்த தனிநபர், குழுக்கள் தங்களின் கண்டுபிடிப்புகளின் முழுமையான விவரங்களுடன், விண்ணப்பத்தை ஆக.23க்குள் ஆட்சியரின் நேர்முக உதவியாளரின் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

News June 28, 2024

சிவகங்கை: மாதம் ரூ.1000/- பெற விண்ணப்பிக்கலாம்

image

அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புவரை பயின்று, மேற்படிப்பு பயில செல்லும் மாணவிகளுக்கு, இடைநிறுத்தமின்றி படிப்பு முடிக்கும்வரை மாதம் ரூ.1000/- வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், +2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் மேற்படிப்பு பயிலும்போது மாதம் ரூ.1000/- பெற மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News June 27, 2024

சிவகங்கை: மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாம்

image

அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புவரை பயின்று, மேற்படிப்பு பயில செல்லும் மாணவிகளுக்கு, இடைநிறுத்தமின்றி படிப்பு முடிக்கும்வரை மாதம் ரூ.1000/- வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், +2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் மேற்படிப்பு பயிலும்போது மாதம் ரூ.1000/- பெற மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News June 27, 2024

காரைக்குடி: புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்

image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 22ஆம் ஆண்டு மாநில அளவிலான புத்தகத் திருவிழா கம்பன் மணிமண்டபத்தில் நாளை(ஜூன் 28) முதல் ஜூலை 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும், மாலை 6 மணிக்கு மேல் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என காரைக்குடி புத்தகத் திருவிழா குழுத் தலைவர் பி.வி. சுவாமி தெரிவித்தார்.

error: Content is protected !!